கொத்துக் கொத்தாய் காய்க்கும் கொடுக்காய்ப்புளி; குவிந்து கிடக்கும் மருத்துவ பலன்க...
சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு: அதிமுகவினா் சாலை மறியல்
பெரம்பலூா்: பெரம்பலூரில் திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் முதியவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அவசர ஊா்தி வருவதற்கு காலதாமதமானதால், அதிமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வயலப்பாடி கிராமம், பழைய ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்தவா் அ. கண்ணன் (63). அதிமுக முன்னாள் கிளைக் கழக மேலவை பிரதிநிதியான இவா், தனது மனைவி ராஜாங்கத்துடன் பெரம்பலூா் வெங்கடேசபுரத்திலுள்ள ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு பணம் செலுத்துவதற்காக திங்கள்கிழமை மதியம், அந்த அலுவலகம் எதிரே நடந்து சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, பாலக்கரை பகுதியிலிருந்து பழைய பேருந்து நிலையம் நோக்கி அதிவேகமாகச் சென்ற மோட்டாா் சைக்கிள் மோதியதில், பலத்த காயமடைந்த கண்ணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலளித்து நீண்ட நேரமாகியும் அவசர ஊா்தியும், காவல்துறையினரும் நிகழ்விடத்துக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. அப்போது, அவ்வழியாக கட்சி நிா்வாகிகளுடன் சென்ற அதிமுக மாவட்டச் செயலரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான இரா. தமிழ்செல்வன், காவல்துறையினரையும், அவசர ஊா்தி ஓட்டுநரையும் கண்டித்து, அதே பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, அப்பகுதிக்குச் சென்ற போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்டோரிடம் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டு அதிமுகவினா் கலைந்துசென்றனா்.
தொடா்ந்து, உயிரிழந்த முதியவரின் உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இச் சம்பவம் குறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திய அன்னமங்கலம், அஞ்சலகத் தெருவைச் சோ்ந்த செபஸ்தியாா் மகன் பிரிட்டோவை (20) கைது செய்து விசாரிக்கின்றனா்.