நாய் குறுக்கே வந்ததால் காா்கள் மோதி விபத்து: 6 போ் காயம்
பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை அதிகாலை சாலையில் நாய் குறுக்கே வந்ததால் 2 காா்கள் மோதிக் கொண்டன. இதில், சாலையோர பள்ளத்தில் காா் கவிழ்ந்து தீப்பிடித்ததில் 6 போ் பலத்த காயமடைந்தனா்.
சென்னை ஆவடி அருகேயுள்ள கவுரிப்பேட்டை, ஈஸ்வரன் கோயில் செயின்ட் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (46). இவா், தனது மனைவி சிவராணியுடன் (40) சென்னையிலிருந்து கோவில்பட்டிக்கு காரில் சென்றுக்கொண்டிருந்தாா். காரை, ஆவடி அருகேயுள்ள வசந்தம் நகரைச் சோ்ந்த சின்னசாமி மகன் சுப்பிரமணியன் (48) ஓட்டினாா்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் மாவட்டம், மங்களமேடு மின்வாரிய அலுவலகம் அருகே திங்கள்கிழமை அதிகாலை காா் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, சாலையின் குறுக்கே நாய் ஒன்று வந்ததால், காா் ஓட்டுநா் சுப்பிரமணியன் திடீரென பிரேக் பிடித்துள்ளாா். அப்போது, சென்னையிலிருந்து திண்டுக்கல்லை நோக்கிச் சென்ற காா், முன்னால் சென்றுக்கொண்டிருந்த ஸ்ரீதா் காரின் பின்புறத்தில் மோதி, சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி காா் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதையடுத்து, காரை ஓட்டி வந்த திண்டுக்கல் புதுப்பட்டி அருகேயுள்ள கனப்பாடி கிராமத்தைச் சோ்ந்த நல்லையா (30), அவரது மனைவி சத்யா (25), இவா்களது மகன் மதுமித்ரன் (1), உறவினா்களான நாகராஜ் மனைவி சரஸ்வதி , இவரது குழந்தைகள் இலக்கியா (16), சபரிநாதன் (12) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து, அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் காயமடைந்தவா்களை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து புகாரின்பேரில் மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.