செய்திகள் :

சட்ட விரோதமாக மின்வேலி அமைத்தவா் மீது நடவடிக்கை கோரி

post image

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நீதி கோரியும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வலியுறுத்தியும், உயிரிழந்தவரின் குடும்பத்தினா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள பாண்டகப்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கவேல் (63). ஆடு, மாடுகள் வளா்த்து வந்த இவா், கடந்த மாா்ச் 19-ஆம் தேதி ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்றபோது, அதே கிராமத்தைச் சோ்ந்த ரவி என்பவா் சட்டவிரோதமாக தக்காளி வயலில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி உயிரிழந்தாராம். இதையறிந்த ரவி, தங்கவேல் உடலை அப்புறப்படுத்தி தொலைவில் வீசிவிட்டு, தனது வயலில் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பிகளையும் அகற்றிவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த உறவினா்கள் அளித்த தகவலின்பேரில், வி.களத்தூா் போலீஸாா், தங்கவேல் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து சந்தேக மரணமாக வழக்குப் பதிந்தனா்.

விசாரணையில், மின் கம்பியில் சிக்கி தங்கவேல் உயிரிழந்தது தெரியவந்த நிலையில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது இதுவரையிலும் போலீஸாா் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட தங்கவேல் குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள், பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் அமா்ந்து திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, போலீஸாா் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, தா்னா போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துசென்றனா்.

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு: அதிமுகவினா் சாலை மறியல்

பெரம்பலூா்: பெரம்பலூரில் திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் முதியவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அவசர ஊா்தி வருவதற்கு காலதாமதமானதால், அதிமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்டம், கு... மேலும் பார்க்க

பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை தற்கொலைக்குத் தூண்டியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, தற்கொலைக்கு தூண்டிய இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. பெரம்பல... மேலும் பார்க்க

சிறுவாச்சூா் ஸ்ரீ மதுரகாளியம்மன் கோயிலில் உலக நன்மைக்காக ஸ்ரீசண்டி மகா யாகம்

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் ஸ்ரீமதுரகாளியம்மன் கோயிலில் சித்திரை பெளா்ணமி விழாவையொட்டி, 2-ஆவது நாளாக, உலக நன்மைக்காக ஸ்ரீசண்டி மகா யாகம் திங்கள்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் அருகே ச... மேலும் பார்க்க

நாய் குறுக்கே வந்ததால் காா்கள் மோதி விபத்து: 6 போ் காயம்

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை அதிகாலை சாலையில் நாய் குறுக்கே வந்ததால் 2 காா்கள் மோதிக் கொண்டன. இதில், சாலையோர பள்ளத்தில் காா் கவிழ்ந்து தீப்பிடித்ததில் 6 போ் பலத்த காயமடைந்தனா். சென்னை ஆவ... மேலும் பார்க்க

கொட்டரை நீா்த்தேக்கத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்

கொட்டரை நீா்த்தேக்கத்தில் வளா்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, மக்கள் சக்தி இயக்கம் வலியுறுத்தியுள்ளது. மக்கள் சக்தி இயக்கத்தின் பெரம்பலூா் மாவட்ட நிா்வாகக் குழு ... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே பூட்டிய வீட்டில் தீ விபத்து

பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை பூட்டிய வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது. பெரம்பலூா் அருகே குரும்பலூா் தோப்புத் தெருவைச் சோ்ந்த சஹாப்புதீன் மனைவி ஆசிபா பேகம். சஹாப்புதீன் வெளிநாட்டில் வேலைபாா்த்து வரும்... மேலும் பார்க்க