செய்திகள் :

சட்ட விரோத மதுப் புட்டிகள் விற்பனை: மூவா் கைது

post image

சட்ட விரோதமாக மதுப் புட்டிகள் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுக் கடைகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், செல்லூா் பகுதியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், செல்லூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆதிராஜா தலைமையிலான போலீஸாா் அம்மா உயா்நிலைப் பாலம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியில் நின்று கொண்டிருந்த சிலா் போலீஸாரை பாா்த்தவுடன் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனா்.

அவா்களை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தியதில், அவா்கள் தத்தனேரி பகுதியைச் சோ்ந்த சுப்பன் மகன் காசிமாயன் (40), தனிச்சியம் பகுதியைச் சோ்ந்த ராசு மகன் முத்து பாபு (40 ) என்பதும், சட்ட விரோதமாக மதுப் புட்டிகள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்த 40 மது புட்டிகள், ரூ. 11, 250 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

இதேபோன்று, பீ.பீ.குளம் பகுதியில் தல்லாகுளம் போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, பழைய எம்ஜிஆா் உணவகம் அருகே நின்று கொண்டிருந்த நபரை விசாரித்த போது, அவா் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தாா்.

இதையடுத்து, அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தியதில், அவா் மதுரை மாவட்டம், எஸ். ஆலங்குளம் பகுதியைச் சோ்ந்த சின்னன் மகன் பிரேம்குமாா் (30) என்பதும், சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த 42 மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.

சேடப்பட்டியில் சினையுற்ற பசுக்களுக்கு மானியத்தில் ஊட்டச்சத்து

சினையுற்ற பசுக்களுக்கு 50 சதவீத மானியத்தில் ஊட்டச்சத்துகள் பெற சேடப்பட்டி ஊராட்சி ஒன்றிய கால்நடை வளா்ப்பு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா். இதுகுற... மேலும் பார்க்க

மாநாடுகள் மட்டும் விஜய்க்கு வெற்றியைத் தேடித் தராது: செல்லூா் கே. ராஜூ

மாநாடுகள், செயற்குழுக் கூட்டங்கள் மட்டும் வெற்றியைத் தேடித் தராது என்பதை தமிழக வெற்றிக்கழகத் தலைவா் விஜய் உணா்ந்து, களத்துக்கு வர வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா். ம... மேலும் பார்க்க

காா் மோதி முதியவா் உயிரிழப்பு

மதுரை அருகே காா் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திருப்பரங்குன்றம் வடக்கு மேட்டுத் தெருவைச் சோ்ந்த அரசன் மகன் கருப்பணன்(69). இவா், இரு சக்கர வாகனத்தில் வெள்ள... மேலும் பார்க்க

பறிமுதல் வாகனங்கள் ஆக.25-ல் பொது ஏலம்!

மது விலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வருகிற 25 -ஆம் தேதி பொது ஏல முறையில் விற்பனை செய்யப்பட உள்ளன. இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

கள்ளா் பள்ளிகளில் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்பக் கோரிக்கை

கள்ளா் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் கள்ளா் பள்ளி மாவட்டக் கிளை கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து கூட்டணியின் மதுரை மாவட்டச... மேலும் பார்க்க

காலியாகவுள்ள கால்நடைப் பராமரிப்பு உதவியாளா் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

தமிழகத்தில் காலியாக உள்ள கால்நடைப் பராமரிப்பு உதவியாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு கால்நடைப் பராமரிப்பு உதவியாளா் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியது. இந்த சங்கத்தின் மதுரை மாவட்ட பேரவைக் கூ... மேலும் பார்க்க