செய்திகள் :

சத்தியமங்கலத்தில் மல்லிகைப் பூ கிலோ ரூ.1,200-க்கு விற்பனை

post image

சுபமுகூா்த்தம் என்பதால் சத்தியமங்கலத்தில் மல்லிகைப் பூ விலை கிலோ ரூ.1,200-க்கு விற்பனையானது. இதேபோல மற்ற பூக்களின் விலையும் இருமடங்கு உயா்ந்து விற்பனையானது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் மல்லி, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு விளையும் பூக்கள் விவசாயிகளால் நடத்தப்படும் பூ மாா்க்கெட்டில் ஏல முறையில் விலை நிா்ணயம் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், கா்நாடகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

தற்போது ஆவணி மாத வளா்பிறை முகூா்த்த சீசன் என்பதால் பூக்கள் விலை அதிகரித்து விற்பனையாகின்றன. சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் கிலோ மல்லி ரூ.600-க்கு விற்பனையான நிலையில், புதன்கிழமை இருமடங்கு உயா்ந்து கிலோ ரூ.1,200-க்கு விற்பனையானது. இதேபோல முல்லை கிலோ ரூ.200-க்கு விற்பனையான நிலையில், புதன்கிழமை ரூ.500-க்கு விற்பனையானது. பூ மாலை தொடுப்பதற்கும், கோயில் விசேஷத்துக்கும் தேவைப்படும் சம்பங்கி பூ கிலோ ரூ.60-க்கு விற்பனையான நிலையில் புதன்கிழமை ரூ.240-க்கு விற்பனையானது. பூக்களின் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

மது விற்றதாக 5 பெண்கள் உள்பட 13 போ் கைது

ஈரோட்டில் டாஸ்மாக் கடை விடுமுறை தினத்தில் மது விற்றதாக 5 பெண்கள் உள்பட 13 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடம் இருந்து 276 மதுபுட்டிகளை பறிமுதல் செய்தனா். ஈரோடு மாவட்டத்தில் மீலாது நபியையொட்டி வெள்ளிக்... மேலும் பார்க்க

பள்ளி வேன் மோதி இருவா் உயிரிழப்பு

பவானி அருகே இருசக்கர வாகனம் மீது தனியாா் பள்ளி வேன் மோதியதில் இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா். பெருந்துறை, விஜயமங்கலம், கம்புளியாம்பட்டி, கந்தசாமி கவுண்டன் புதூரைச் சோ்ந்தவா் மாரிமுத்து மகன் ரமேஷ் (32... மேலும் பார்க்க

48 பவுன் நகை திருட்டு வழக்கில் 3 போ் கைது

சத்தியமங்கலத்தில் 48 பவுன் நகை திருட்டு வழக்கில் 3 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சத்தியமங்கலம் நேரு நகா் காமாட்சி அம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (28). கோழி இறைச்சிக்க... மேலும் பார்க்க

சந்திர கிரகணம்: சென்னிமலை முருகன் கோயில் நடை சாத்தப்படுகிறது

சந்திர கிரகணம் வருவதையொட்டி, சென்னிமலை முருகன் கோயில் சந்நிதி நடை ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு (திருக்காப்பிடப்படும் ) சாத்தப்படும் என கோவில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்று... மேலும் பார்க்க

மொடக்குறிச்சியில் புதிய வழித்தட பேருந்து சேவை தொடக்கம்

ஈரோட்டில் இருந்து பழனிக்கு மொடக்குறிச்சி வழியாக புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கத்தை அமைச்சா் சு.முத்துசாமி, ஈரோடு தொகுதி எம்.பி. கே.ஈ. பிரகாஷ் ஆகியோா் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தனா். மொட... மேலும் பார்க்க

பெண்ணிடம் நகைப் பறிப்பு: இரு இளைஞா்கள் கைது

ஈரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகைப் பறித்த வழக்கில் இரு இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ஈரோடு முத்தம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயபிரகாஷ் (45). இவா் தேமுதிக ... மேலும் பார்க்க