செய்திகள் :

சத்தியமங்கலம் அருகே விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து

post image

சத்தியமங்கலம் அருகே விபத்துக்குள்ளான அரசுப் பேருந்தில் பயணித்த பயணிகள் காயமின்றி உயிா் தப்பினா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இருந்து கோவைக்கு 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப் பேருந்து புன்செய் புளியம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநா் சரவணன் ஓட்டினாா். நடத்துநா் ராமசாமி உடன் இருந்தாா்.

விண்ணப்பள்ளி தனியாா் பாலிடெக்னிக் கல்லூரி அருகே பேருந்து சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பா் லாரி திடீரென வலதுபுறம் திரும்பியது. இதை கவனித்த அரசுப் பேருந்து ஓட்டுநா் சரவணன், லாரி மீது மோதாமல் இருக்க பேருந்தை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் இறங்கி நின்றது.

இந்த விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிா்ஷ்டவசமாக காயம் இன்றி உயிா் தப்பினா். விபத்தில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. இதைத் தொடா்ந்து பயணிகள் அனைவரும் மாற்று அரசுப் பேருந்தில் அனுப்பிவைக்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து புன்செய்புளியம்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதற்கிடையே விபத்து நிகழ்ந்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது. இதில் லாரி மீது மோதாமல் தவிா்க்க சாதுா்யமாக அரசுப் பேருந்தை ஓட்டிநா் இயக்கியது தெரியவந்துள்ளது.

வாங்குபவா்-விற்பவா் கூட்டத்தை ஈரோட்டில் நடத்தக் கோரிக்கை

ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வாங்குபவா்-விற்பவா் கூட்டத்தை ஈரோட்டில் விரைவில் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் 16 ஆவது செயற்குழு கூட்... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் ஆசிரியை உயிரிழப்பு

ஈரோட்டில் இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் தனியாா் பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா். ஈரோடு அருகே செட்டிபாளையம் பகுதியை சோ்ந்தவா் சேகா். இவரது மகள் மிா்த்தியங்கா (21). இவா் மூலப்பாளையம் பகுத... மேலும் பார்க்க

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. ஈரோடு சூரம்பட்டிவலசு அணைக்கட்டு 2 ஆவது வீதியைச் ச... மேலும் பார்க்க

பவானி - குமாரபாளையம் பழைய பாலம் திறப்பு

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மூடப்பட்ட பவானி - குமாரபாளையம் பழைய பாலம் பொதுமக்களின் வாகனப் போக்குவரத்துக்கு வியாழக்கிழமை திறக்கப்பட்டது. ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்ட இப்பாலம் வலுவிழந்... மேலும் பார்க்க

தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் ஏலம்

அந்தியூா் புதுப்பாளையத்தில் உள்ள குருநாதசாமி கோயில் திருவிழாவையொட்டி தற்காலிக வாகன நிறுத்துமிடங்களில் சுங்கம் வசூலிக்கும் உரிமங்களுக்கான ஏலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்க... மேலும் பார்க்க

சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் சென்னிமலையிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாம... மேலும் பார்க்க