செய்திகள் :

சத்தீஷ்கர்: கர்ப்பத்தைக் கலைக்க சொன்ன காதலன்; கழுத்தை அறுத்துக் கொன்ற காதலி; விசாரணையில் பகீர் தகவல்

post image

சத்தீஷ்கர் மாநிலம் பிலாஸ்பூர் அருகில் உள்ள கோனி என்ற கிராமத்தில் வசிக்கும் மைனர் பெண் ராய்ப்பூரில் வசிக்கும் மொகமத் சதாம் என்ற வாலிபரைக் காதலித்து வந்தார்.

இதில் மைனர் பெண் கர்ப்பமானார். பீகாரைச் சேர்ந்த மொகமத் சதாம் ராய்ப்பூரில் தங்கி வேலை செய்து வந்தார். மைனர் பெண் தனது காதலனைத் தேடி ராய்ப்பூருக்குச் சென்றார். அங்கு இருவரும் அங்குள்ள லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்துத் தங்கினர். அங்குத் தனது காதலியிடம் கர்ப்பத்தைக் கலைத்துவிடும்படி சதாம் கேட்டுக்கொண்டார். அவர்களுக்குள் இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதத்தில் சதாம் கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி கருவைக் கலைக்கும்படி மிரட்டினார்.

கொலை நடந்த லாட்ஜ்
கொலை நடந்த லாட்ஜ்

இரவில் சதாம் உறங்கிக்கொண்டிருந்தபோது அவரது காதலி தன்னை சதாம் மிரட்டப் பயன்படுத்திய கத்தியை எடுத்து சதாம் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்த மொபைல் போனை எடுத்துக்கொண்டு அறையைப் பூட்டிவிட்டுச் சென்றுவிட்டார். வீட்டிற்குச் சென்ற மைனர் பெண் தனது தாயாரிடம் சென்று நடந்த சம்பவத்தைக் கூறி அழுதார்.

இதையடுத்து அவரது தாயார் தனது மகளை அழைத்துச்சென்று உள்ளூர் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் உடனே சம்பவம் நடந்த லாட்ஜ் அறைக்குச் சென்று சதாம் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சதாம் உறவினர்களைத் தொடர்பு கொள்ள முயன்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

போலீஸாரின் விசாரணையில், மைனர் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். எனவே அப்பெண்ணிடம் உன்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்றும், எனவே கர்ப்பத்தைக் கலைத்து விடும்படியும் சதாம் கூறினார். இதனால் இருவருக்கும் இடையே தொடர்ந்து சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. கொலை செய்யப்பட்ட நபர் கத்தியைக் காட்டி மிரட்டி இருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது.

இதே ராய்ப்பூரில் வாணி என்ற 30 வயது காதலியை அவரது காதலன் லாட்ஜ் அறையில் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். கொலை செய்த காதலன் விஷால் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

தாய் கொலை; 19 வயது வாலிபருடன் கைதான 47 வயது மகள்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி காயாம்பு கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (77). தேவகோட்டை மருத்துவமனையில் மகப்பேறு உதவியாளராக பணியாற்றி வந்த இவர், பணி ஓய்வுக்குப் பின் சாயல்குடியில் வசிக்கும் மூத்த... மேலும் பார்க்க

சென்னை: கணவரைக் கொன்று விட்டுப் பொய் சொன்ன மனைவி; இறப்பதற்கு முன் கணவன் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரகலாத் சர்தார். இவர் தன்னுடைய முதல் மனைவியைப் பிரிந்து, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, கணவரைப் பிரிந்து வாழும் பிங்கி என்பவருடன் குடும்பம் நடத்தி வருகிறார். பின்னர் பிழைப்பு... மேலும் பார்க்க

'போலி விளம்பரம், பகுதிநேர வேலை, கை நிறைய காசு, லட்சங்கள் அபேஸ்' - சைபர் கொள்ளையர் சிக்கியது எப்படி?

பகுதிநேர வேலை, அதிக வருமானம் என, சமூக ஊடகங்களில் வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள், வாட்ஸ் அப்பில் வரும் குறுஞ்செய்திகள், ஆன்லைன் தங்க வர்த்தகம், பங்குச்சந்தை முதலீடு, டிஜிட்டல் மார்க்கெட்டிங் எனப் பல்... மேலும் பார்க்க

நீலகிரி: வாழிடம் இழந்த யானைகள் தாக்குதல் - ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்த சோகம்

நீலகிரி மலையில் வாழிடங்களையும் வலசைப்பாதைகளையும் இழந்து தவிக்கும் யானைகள் போக்கிடம் தெரியாமல் தடம் மாறி வருகின்றன. உணவு, தண்ணீர், இனப்பெருக்கம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்காக ஓரிடத்தில் இருந்து மற்ற... மேலும் பார்க்க

திருமணத்துக்கு முன் தனிமை; பணத்தைச் சுருட்டியதும் எஸ்கேப் - யார் இந்த மன்மதன் சூர்யா?

சென்னை, சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராணி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் தனியார் மருத்துவமனையில் நர்ஸாக வேலை செய்து வருகிறார். கடந்த 2024-ம் ஆண்டு ராணிக்கு வரன் தேடி அவரின் பெற்றோர் திருமண த... மேலும் பார்க்க

திருவண்ணாமலை: சகோதரி கண்ணெதிரே பெண் பாலியல் வன்கொடுமை; இபிஎஸ் கண்டனம்; 2 போலீஸ்காரர்கள் கைது

திருவண்ணாமலை கிழக்குக் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர்கள் சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஏந்தல் புறவழிச்சாலை வழியாகச் சென்ற ஆந்திர மாநிலத்... மேலும் பார்க்க