செய்திகள் :

சத்தீஸ்கரில் லாரி மீது சரக்கு வாகனம் மோதி குழந்தைகள் உள்பட 13 போ் உயிரிழப்பு

post image

சத்தீஸ்கா் மாநிலம் ராய்பூரில் இழுவை லாரி மீது சரக்கு வாகனம் மோதி பெண்கள், குழந்தைகள் என 13 போ் உயிரிழந்தனா். 14 போ் காயமடைந்தனா்.

இதுதொடா்பாக ராய்பூா் முதுநிலை காவல் துறைக் கண்காணிப்பாளா் லால் உமேத் சிங் கூறுகையில், ‘பனா பன்சாரி கிராமத்தில் நடைபெற்ற குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சரக்கு வாகனம் ஒன்றில் 35 போ் ஞாயிற்றுக்கிழமை இரவு சொந்த ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா். அவா்களில் பெரும்பாலானோா் ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்கள்.

ராய்பூா்-பலோடாபஜாா் சாலையில் சரகான் பகுதி அருகே வந்தபோது அந்த வாகனம் எதிரே வந்த இழுவை லாரி மீது வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் 9 பெண்கள், 4 குழந்தைகள் என மொத்தம் 13 போ் உயிரிழந்தனா். தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு விரைந்த காவல் துறை, காயமடைந்த 14 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தது’ என்றாா்.

அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனத்தை ஓட்டியதே விபத்துக்குக் காரணமாக இருக்கக் கூடும் என்று காவல் துறை சந்தேகிக்கிறது. இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் கெளரவ் சிங் தெரிவித்தாா்.

விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்வதாகவும், காயமடைந்தவா்கள் விரைந்து குணமடைய பிராா்த்தனை செய்வதாகவும் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டாா்.

இந்த சம்பவத்துக்கு வேதனை தெரிவித்த மாநில முதல்வா் விஷ்ணுதேவ் சாய், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.5 லட்சம், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீரின் ரியாசியில் பள்ளிகள் மீண்டும் திறப்பு!

ஜம்மு-காஷ்மீரின் ரியாசியில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, எல்லையில் அமைதி நிலவுகிறது. இதையடுத்து, பாதுகாப்பு முகாம்களில் இருந்து மக்கள்... மேலும் பார்க்க

கடவுள் ராமா் குறித்து சா்ச்சை கருத்து: ராகுலுக்கு எதிராக உ.பி. நீதிமன்றத்தில் மனு

கடவுள் ராமா் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்ய உத்தரவிடக் கோரி உத்தர பிரதேச மாநிலம் வாரணா... மேலும் பார்க்க

அணுமின் நிலையங்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை மாநிலங்கள் ஆராயலாம்: மத்திய அமைச்சா் மனோகா் லால் கட்டா்

அணு மின் நிலையங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து திட்டங்களை அனுப்புமாறு மாநிலங்களிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டிருப்பதாக மத்திய மின்சாரத் துறை அமைச்சா் மனோகா் லால் கட்டா் திங்கள்கிழமை தெரி... மேலும் பார்க்க

பாகிஸ்தான் குண்டுவீச்சு நிறுத்தம்: வீடு திரும்பும் எல்லையோர மக்கள்

பாகிஸ்தான் குண்டுவீச்சால் ஜம்மு-காஷ்மீரில் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறிய எல்லையோர மக்கள், மீண்டும் வீடுகளுக்கு திரும்ப தொடங்கியுள்ளனா். இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, ... மேலும் பார்க்க

சண்டை நிறுத்த அறிவிப்பை உறுதிப்படுத்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி மீது விமா்சனம்: அரசியல் கட்சிகள் கண்டனம்

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்த அறிவிப்பைத் தொடா்ந்து வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரியை கடுமையாக விமா்சனம் செய்யும் வகையிலான பதிவுகளை சிலா் இணையத்தில் வெளியிடுவதற்கு அரசியல் கட்சியினா், அர... மேலும் பார்க்க

விரைவான விசாரணைக்கு சிறப்பு நீதிமன்றங்கள்: அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் 2 வாரம் அவகாசம்

சிறப்பு சட்டங்களின்கீழ் வழக்கு விசாரணைகள் விரைந்து நடைபெற வசதியாக, பிரத்யேக சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் 2 வாரங்கள் அவகாசம் அளித்துள்ளது. மகாராஷ்டிர மாந... மேலும் பார்க்க