செய்திகள் :

சத்தீஸ்கரில் 3 நக்ஸல்கள் சுட்டுக் கொலை- பாதுகாப்புப் படையினா் நடவடிக்கை

post image

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் செவ்வாய்க்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதிகள் 3 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். இவா்களில் ஒருவா் ரூ.25 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்தவா் ஆவாா்.

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் மிகுந்த பஸ்தா் பகுதியில் தந்தேவாடா, பிஜாபூா், சுக்மா உள்ளிட்ட 7 மாவட்டங்கள் அமைந்துள்ளன.

தந்தேவாடா, பிஜாபூா் ஆகிய மாவட்டங்களின் எல்லையில் உள்ள வனப் பகுதியில் காவல் துறையின் மாவட்ட ரிசா்வ் படையினா் (டிஆா்ஜி) மற்றும் ‘பஸ்தா் ஃபைட்டா்ஸ்’ படைப் பிரிவினா் இணைந்து நக்ஸல்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். அப்போது, நக்ஸல்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது.

இதில் நக்ஸல் தீவிரவாதிகள் 3 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன.

கொல்லப்பட்ட நக்ஸல்களில் ஒருவா், தெலங்கானா மாநிலம், வாரங்கல்லைச் சோ்ந்த சுதீா் ஆவாா். பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இவரைக் குறித்து தகவல் அளிப்பவருக்கு ரூ.25 லட்சம் வெகுமதி அறிவித்து, காவல் துறையினா் தேடி வந்தனா் என்று காவல் கண்காணிப்பாளா் கெளரவ் ராய் தெரிவித்தாா்.

நாட்டில் நக்ஸல் தீவிரவாதத்தை அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் ஒழிக்கும் இலக்குடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அதன்படி, நக்ஸல் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

சத்தீஸ்கரில் நிகழாண்டு இதுவரை 116 நக்ஸல் தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா். பஸ்தா் பகுதியில் மட்டும் 100 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா்.

பிஜாபூா், கான்கா் ஆகிய மாவட்டங்களில் கடந்த மாா்ச் 20-ஆம் தேதி பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 30 நக்ஸல்கள் கொல்லப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்போன்களில் நேரம் செலவிடும் இந்தியர்களால் வருவாய் அதிகரிப்பு!

இந்தியாவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை வளர்ச்சியடைவதாக இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் எர்ன்ஸ் & யங்கின் ஆய்வில் தெரிவித்துள்ளது.இந்தியாவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு த... மேலும் பார்க்க

ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில் 7 பேர் காயம்

ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் ஏழு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.ஒடிசா மாநிலம், மங்குலி அருகே நிர்குன்டியில் பெங்களூரு-காமாக்யா எக்ஸ்பிரஸ் ... மேலும் பார்க்க

தாணேவில் தடை செய்யப்பட்ட 238 இருமல் சிரப் பாட்டில்கள் பறிமுதல்

தாணேயில் தடை செய்யப்பட்ட 238 கோடீன் இருமல் சிரப் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தின் ஷில் டைகர் பகுதியில் வெள்ளிக்கிழமை மதியம் இருசக்கர வாகனத்தில் 22 வயது நபரைப் பி... மேலும் பார்க்க

புவனேஸ்வரில் பல்கலை. விடுதியில் முதுகலை மாணவர் சடலம் மீட்பு

புவனேஸ்வரில் உள்ள பல்கலைக்கழக விடுதியில் இருந்து முதுகலை மாணவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள உத்கல் பல்கலைக்கழக விடுதி வளாகத்திற்குள் ஞாயிற்றுக்கிழமை காலை முதுகலை மாணவரி... மேலும் பார்க்க

பெங்களூரு ஏசி விரைவு ரயிலில் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து!

பெங்களூரு ஏசி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. பெங்களூரிலிருந்து தமிழகம், ஆந்திரா வழியாக அஸ்சாம் செல்லும் இந்த ரயில், ஒடிஸாவில் கட்டாக் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தபோது ரயிலின் 11 பெட்... மேலும் பார்க்க

மனதின் குரல் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பிரதமர் அறிவுரை!

மனதின் குரல் நிகழ்ச்சியில் யோகா நாள், கோடைக்காலம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி நாட்ட... மேலும் பார்க்க