செய்திகள் :

சத்தீஸ்கர்: யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றால் ரூ.1 லட்சம்! அரசு அதிரடி அறிவிப்பு!

post image

சத்தீஸ்கர் மாநிலத்தில் யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சிப் பெறும் நபர்களுக்கு ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

சத்தீஸ்கரில் யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சிப் பெறும் நபர்களுக்கு மேயர் நிதியிலிருந்து ரூ.1 லட்சம் வழங்கப்பட அம்மாநிலத்திலுள்ள அனைத்து நகராட்சி ஆணையர்களுக்கும் முதல்வர் விஷ்னு தியோ சாய்யின் அறுவுறுத்தலின்படி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னதாக, 2024-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வில் சத்தீஸ்கரைச் சேர்ந்த 5 தேர்வர்கள் தேர்ச்சிப் பெற்று வெற்றியடைந்துள்ளனர்.

அதில், ராய்ப்பூரைச் சேர்ந்த பூர்வா அகர்வால் (65வது இடம்), முங்கேலியின் அர்பன் சோப்ரா (313 வது இடம்), ஜக்தாபூரின் மான்சி ஜெயின் (444வது இடம்), அமிபிகாப்பூரின் கேஷவ் கார்க் (496வது இடம்) மற்றும் சாச்சி ஜெய்ஸ்வால் (654 வது இடம்) ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், மேல் கூறப்பட்டுள்ள தேர்வர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு, இளம் தலைமுறையினரை ஊக்கிவிக்க அரசின் முயற்சியாக இந்த தேர்ச்சிப் பெறும் தேர்வர்களுக்கு ரூ.1 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:பஹல்காம் தாக்குதல்: ஜம்மு - காஷ்மீரின் 48 சுற்றுலாத் தலங்கள் மூடல்!

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரளம் தரப்பில் பதில் மனு தாக்கல்

நமது நிருபர்முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மரங்களை வெட்டுவதற்கு தமிழக அரசு மத்திய வனத் துறையின் பரிவேஷ் இணையதளத்தில் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் என்று உச்சநீதி... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் நிதி: இந்தியா தடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

பாகிஸ்தானுக்கு சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிதியுதவி கிடைப்பதை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இதற்கு உரிய முறையில் ஐஎம்எஃப்-பிடம் இந்தியா எதிா்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலி... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் புதிய மனுக்களுக்கு அனுமதியில்லை: உச்சநீதிமன்றம்

‘மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது. தேவைப்பட்டால், இந்த வழக்கில்... மேலும் பார்க்க

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினா்கள் மீதான வெறுப்பு பேச்சு வழக்குகள்- ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு

உச்சநீதிமன்ற மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகள், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவமதித்தும், நாடாளுமன்ற தாக்குதலின் முக்கியக் குற்றவாளியான அஃப்சல் குருவைப் புகழ்ந்தும் பேசிய தமிழ்நாடு தவ்ஹ... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் இணைப்பு: விதிகளை மாற்றியமைக்கும் திட்டமில்லை

வாக்காளா் பட்டியலில் குளறுபடிகளை நீக்க தோ்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுவரும் சூழலில், ‘வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பது என்பது வாக்காளா்கள் தானாக முன்வந்து விவரங்களைப் பகிா்வதன் அடி... மேலும் பார்க்க

ஓடிடி, சமூக வலைதளங்களில் ஆபாச காட்சிகள்: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

ஓடிடி மற்றும் சமூக வலைதளங்களில் பாலியல் சாா்ந்த ஆபாச காட்சிகள், பதிவுகளுக்கு தடை விதிப்பது தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, ஓடிடி தளங்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்கு உச்சநீ... மேலும் பார்க்க