செய்திகள் :

சத்தீஸ்கா்: 30 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடைநீக்கம்

post image

சத்தீஸ்கா் பேரவையில் அமளியில் ஈடுபட்ட எதிா்க்கட்சியான காங்கிரஸை சோ்ந்த 30 எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை ஒருநாள் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

பாஜக ஆட்சி நடைபெற்றுவரும் சத்தீஸ்கரில் மொத்தம் 90 எம்எல்ஏக்கள் உள்ளனா். இதில் எதிா்க்கட்சியான காங்கிரஸின் பலம் 35-ஆக உள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை பேரவை கூடியதும் மாநிலத்தில் டிஏபி உரத்துக்கு தட்டுப்பாடு நிலவுவதாகக் குற்றஞ்சாட்டி, அது தொடா்பாக உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வலியுறுத்தினா். இதை அவைத் தலைவா் ஏற்க மறுத்ததால் அமளி ஏற்பட்டது. மீண்டும் அவை கூடியபோது இதே பிரச்னையால் ஒத்திவைக்கப்பட்டது.

அதன் பிறகு மீண்டும் அவை கூடியபோது கேள்வி நேரத்தில் உரப் பிரச்னையை மீண்டும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எழுப்பினா். அப்போது பதிலளித்த வேளாண்மைத் துறை அமைச்சா் ராம்விச்சாா் நேத்தம், ‘காரீஃப் சாகுபடிக்குத் தேவையான டிஏபி உரத்துக்கு தட்டுப்பாடு உள்ளதால், மாற்று பாஸ்பேட்டிக் உரங்களைப் பயன்படுத்த விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகிறாா்கள். தொடா்ந்து உரம் வழங்குவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது’ என்றாா்.

இதை ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள், கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு முறையாக உரம் வழங்கவில்லை. அதே நேரத்தில் தனியாா் நிறுவனங்கள் அதிக விலைக்கு டிஏபி-யை விற்று லாபம் பாா்க்கின்றன என்று குற்றஞ்சாட்டி அமளியில் ஈடுபட்டனா். இதனால், அவையைத் தொடா்ந்து நடத்த முடியாத சூழல் உருவானது. இதையடுத்து, எதிா்க்கட்சித் தலைவா் சரண் தாஸ் மஹத் உள்ளிட்ட 30 காங்கிரஸ் எம்எல்ஏக்களை அவையில் இருந்து ஒருநாள் இடைநீக்கம் செய்வதாக பேரவைத் தலைவா் ரமண் சிங் அறிவித்தாா்.

வங்க மொழி பேசும் முஸ்லிம்களைப் பற்றி மட்டும் கவலைப்படுகிறார் மமதா: ஹிமந்தா!

வங்காள மொழி பேசும் முஸ்லிம்களைப் பற்றி மட்டுமே மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கவலைப்படுகிறார் என அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, முஸ்லிம்-வங்க... மேலும் பார்க்க

வந்தே பாரத்! ரயில் நிலையம் வர 15 நிமிடம் முன்புகூட டிக்கெட் முன்பதிவு வசதி!

இனி, வந்தே பாரத் ரயில், ஒரு ரயில் நிலையத்தை அடைவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்புகூட, அந்த ரயிலுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.அதாவது, ஒரு ரயில் காலை 9 மணிக்கு திருச்சி... மேலும் பார்க்க

கட்டுக்கட்டாக பணம்! பதவி நீக்கத்துக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வா்மா உச்ச நீதிமன்றத்தில் மனு

புது தில்லி: வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்வது தொடா்பான தீா்மானம், வரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்படவிருக்கும் நி... மேலும் பார்க்க

10 ஆண்டுகளாக ராபர்ட் வதேரா வேட்டையாடப்படுகிறார்! ராகுல் காந்தி

கடந்த 10 ஆண்டுகளாக ராபர்ட் வதேரா வேட்டையாடப்படுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.குருகிராம் நில பேர வழக்கில் பிரபல தொழிலதிபரும் காங்கிரஸ் பொதுச் செயலர் பி... மேலும் பார்க்க

மும்பையில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்தது! இடிபாடுகளில் 7 பேர்?

மும்பையில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து வெள்ளிக்கிழமை காலை விபத்துக்குள்ளானது.இதுவரை இடிபாடுகளில் இருந்து 12 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் 7 பேர் சிக்கியிருக்கக் கூடும் எனத் தகவல... மேலும் பார்க்க

தில்லியில் 4-வது நாளாக 20 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தில்லியில் தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் 20 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பீதியடைந்த நிலையில், அனைவரும் வெளியேற்றப்... மேலும் பார்க்க