செய்திகள் :

சபரிமலை தரிசனத்திற்கு வரும் ஜனாதிபதி திரெளபதி முர்மு; 2 நாள்கள் ஆன்லைன் முன்பதிவு ரத்து!

post image

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மாதாந்திர பூஜைகளுக்காக தமிழ் மாதம் 1-ம் தேதி முதல் 5 நாள்கள் நடை திறக்கப்பட்டிருக்கும். அப்போது பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள்.

வைகாசி மாதத்திற்கான மாதாந்திர பூஜைகளுக்காக வரும் 14-ம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை நடைதிறக்கிறது. 19-ம் தேதி இரவு 10 மணிவரை பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு வரும் 18-ம் தேதி சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து கேரள போலீஸ் மற்றும் சபரிமலை கோயிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவிதங்கூர் தேவசம்போர்டு ஆன்லைன் முன்பதிவு 4 நாட்கள் ம்ட்டுமே ஓப்பனில் உள்ளது

கேரள அரசுக்கும் அதிகாரப்பூர்வமான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 18-ம் தேதி கேரளா வரும் ஜனாதிபதி திரெளபதி முர்மூ அன்று அல்லது 19-ம் தேதி சபரிமலையில் தரிசனம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் ஆன்லைன் முன்பதிவில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய முன்பதிவு செய்யும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு இணையதளத்தில், 14-ம் தேதி மலை 5 மணி முதல் 17-ம் தேதி இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் முன்பதிவு செய்ய முடியும்.

18 மற்றும் 19-ம் தேதிகளில் முன்பதிவு செய்ய வழிவகை ஏற்படுத்தவில்லை. இந்த இரண்டு நாள்களில் எதாவது ஒருநாள் ஜனாதிபதி திரெளபதி முர்மு சபரிமலையில் தரிசனம் செய்யலாம் என்பது உறுதி ஆகியுள்ளது.

சபரிமலை

வரும் 18-ம் தேதி கோட்டயம் குமரகத்தில் ஜனாதிபதி தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சபரிமலையில் உள்ள தேவசம்போர்டு விடுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுவருவதால் 18-ம் தேதி சபரிமலை செல்லும் ஜனாதிபதி அங்கு தங்கிவிட்டு மறுநாள் திரும்பிச்செல்ல வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பம்பாவில் இருமுடி கட்டி அங்கிருந்து சுவாமி ஐயப்பன் சாலை வழியாக காரில் சபரிமலை செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சபரிமலைக்கு தரிசனத்துக்காக ஜனாதிபதி வருகைபுரிவது இதுதான் முதல்முறையாகும்.

தீர்த்தவாரித் திருவிழா: முக்கோடி தேவதைகள் தீர்த்தமாடி, முன்னை வினை தீர்த்த திருக்கோடிக்கா!

முக்கோடித் தேவதைகள் தீர்த்தமாடி முன்னை வினை தீர்த்த திருக்கோடிக்கா! தீர்த்தவாரித் திருவிழா மற்றும் ரிஷபவாகனக் காட்சி சித்திரை 27, சனிக்கிழமை - 10.05.2025 திருக்கோடிக்காபொதுவாக திருத்தலங்களைத் தரிசிக்க... மேலும் பார்க்க

பங்குனி உத்திர திருவிழா: `மாணவர்கள் உள்பட 56 பேர் மீது வழக்கு' - அதிருப்தியில் 18 கிராம மக்கள்!

தஞ்சாவூர் அருகே உள்ளது காசவளநாடு கோவிலுர் கிராமம். 18 கிராமங்களுக்கு தலைகிராமமான இந்த ஊரில் அமைந்துள்ள ஜம்புகேஸ்வரர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் இக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழ... மேலும் பார்க்க

மஹாமிருத்யுஞ்ஜய ஹோமம்: நீண்ட ஆயுளும் நிறைவான ஆரோக்கியமும் நீங்காத செல்வமும் பெற சங்கல்பியுங்கள்

26-5-2025 திங்கள்கிழமை நிறைந்த அமாவாசை நன்னாளில் இங்கு பிரமாண்ட மஹாமிருத்யுஞ்ஜய ஹோமமும் சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது. உங்கள் தோஷங்கள், பாவங்கள், சாபங்கள், அச்சங்கள் யாவையும் வெல்ல இந்த ஹோமத்தில் கலந... மேலும் பார்க்க

அஷ்ட லட்சுமியரும் சிவபூஜை செய்த தேரழுந்தூர் கோயில்; போனால் விருப்பங்கள் யாவும் நிறைவேறும்

தேரழுந்தூர் சிவாலய மஹா கும்பாபிஷேக நிகழ்வானது எதிர்வரும் 04.05.2025 - ஞாயிறு அன்று நிகழ்த்தப்பெற உள்ளது. அதையொட்டி விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை சடங்குகள் முதலான நிகழ்வுகளும் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிரு... மேலும் பார்க்க

காஞ்சி சங்கர மடத்தின் 71-வது இளைய பீடாதிபதியாக சுப்பிரமணிய கணேச சர்மா திராவிட் நியமனம்!

பழம்பெருமை மிக்க காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71 -வது இளைய பீடாதிபதியாக, சுப்பிரமணிய கணேச சர்மா டிராவிட் அட்சய திருதியை நாளான நேற்று பொறுப்பேற்று கொண்டார். இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். காஞ்சிபுரம... மேலும் பார்க்க

வரலாற்றுச் சிறப்புமிக்க சிரசுத் திருவிழா... மே 15 வேலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் திருக்கோயிலின் `சிரசு’ திருவிழா, வரும் மே 15-ம் தேதி (வியாழக்கிழமை) வெகு விமர்சையாக நடைபெறவிருக்கிறது.தமிழகத்த... மேலும் பார்க்க