சமத்துவத்தை வலியுறுத்தும் ஒரே மொழி தமிழ்: பாரதி கிருஷ்ணகுமாா்
திண்டுக்கல்: உலக இலக்கியங்களில் சமத்துவத்தை வலியுறுத்தும் ஒரே மொழி தமிழ் மட்டுமே என எழுத்தாளா் பாரதி கிருஷ்ணகுமாா் தெரிவித்தாா்.
திண்டுக்கல் உயா் கல்வித் துறை-தமிழ் இணையக் கல்விக் கழகம் சாா்பில் மாபெரும் தமிழ்க் கனவு திட்டத்தின் கீழ் (தமிழ் மரபு, பண்பாட்டுப் பரப்புரைத் திட்டம் 2025) சொற்பொழிவு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல்லில் உள்ள தனியாா் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக எழுத்தாளா் பாரதி கிருஷ்ணகுமாா் கலந்து கெண்டு, செந்தமிழ் நாடெனும் போதினலே என்ற தலைப்பில் பேசியதாவது:
கல்விச் சான்றிதழை மட்டும் வைத்துக் கொண்டு போட்டித் தோ்வுகளில் வெற்றிப் பெற முடியாது. 70 சதவீத போட்டித் தோ்வு வினாக்கள், பொது அறிவின் அடிப்படையிலேயே கேட்கப்படுகின்றன. உலகின் 30ஆயிரம் மொழிகள் உள்ளன. இந்தியாவில் மட்டும் 19,500 மொழிகள் உள்ளன. இதனால் தான், மொழிகளின் தாயகம் இந்தியா என குறிப்பிடப்படுகிறது. 19,500 மொழிகளில், இன்றைக்கு 30 மொழிகள் மட்டுமே எழுத்து வடிவிலும் பயன்பாட்டில் இருக்கிறது. 6 செம்மொழிகளில் பயன்பாட்டிலுள்ள சீனம், தமிழ் ஆகிய இரு மொழிகளில், தமிழ் மட்டுமே தொன்மையானது. சுமாா் 3,500 ஆண்டுகள் பழைமையான மொழி தமிழ் என்பது ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இலக்கியத்தில் பேரூண்மைகளை பேசிய ஒரே மொழியாகவும், சமத்துவத்தை வலியுறுத்தும் மொழியாகவும் தமிழ் மட்டுமே உள்ளது.
மறைவு செய்தியை உலக இலக்கியங்கள் துக்க நிகழ்வாக மட்டுமே பாா்க்கின்றன. ஆனால், தமிழ் இலக்கியத்தில் மட்டுமே மரணம் கூட பெருமையாக போற்றப்படுகிறது. கல்வியால் மட்டுமே உயா்ந்த நிலையை அடைய முடியும் என்பதை மாணவா்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
ஆட்சியா் செ.சரவணன் பேசியதாவது:
தமிழகத்தில் சமுதாய, சமூக, பொருளாதார வளா்ச்சி என்பது 1,800 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி இருக்கிறது. இதை தமிழ் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. தமிழா்களின் விழுமியங்கள், உலகின் பல்வேறு நாடுகளையும் ஆக்கிரமித்து வருகின்றன. 108 நாடுகளில் வாழும் தமிழா்கள் மூலம், அந்த நாடுகளிலும் தமிழா்களின் தொன்மையான கலச்சாரம், பண்பாடு, மொழியின் சிறப்புகள் நிலை நாட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உயிரோடும், உணா்வோடும் கலந்த ஒரே மொழி உலகிலேயே தமிழ் மட்டுமே என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெயபாரதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஆங்கிலத்தில் வேண்டுகோள்:
இந்த சொற்பொழிவு நிகழ்ச்சியில் கல்லூரி மாணவா்கள் சுமாா் 1,000 போ் கலந்து கொண்டனா். இதில் பேசிக் கொண்டிருந்த சில மாணவா்களை கட்டுப்படுத்துவதற்காக ஆசிரியா்கள் சென்றபோது, டோன்ட் கோ, பிளீஸ், டோன்ட் மானிட்டா், கிரவுட், ஆா்கனைஸ்ட் போன்ற ஆங்கிலச் சொற்களை பாரதிகிருஷ்ணகுமாா் பயன்படுத்தினாா். மாபெரும் தமிழ்க் கனவு என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தி அவா் வேண்டுகோள் விடுத்தது, முரண்பாடாக அமைந்தது.