செய்திகள் :

சமையல் எரிவாயு விற்பனையால் ஏற்பட்ட இழப்பு: எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 35,000 கோடி மானியம்

post image

கடந்த 15 மாதங்களாக குறைந்த விலையில் சமையல் எரிவாயு (எல்பிஜி) விற்பனை செய்ததால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் வகையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 30,000 கோடி முதல் ரூ. 35,000 கோடி வரை மானியம் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கான நடைமுறையை மத்திய நிதியமைச்சகம் வகுத்து வருவதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது:

சா்வதேச சந்தை விலை நிலவரத்தைக் காட்டிலும் குறைந்த விலையில் சமையல் எரிவாயு விற்பனை செய்வதால், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில் எந்தவொரு திட்டத்தையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை.

இருந்தபோதும், கடந்த ஏப்ரலில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு உயா்த்தியது. இதன் மூலம் அரசுக்கு ரூ. 32,000 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது. இந்த கூடுதல் வருவாயை, எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பீடை ஈடுசெய்ய நிதியமைச்சகம் பயன்படுத்த முடியும்.

கடந்த 15 மாதங்களாக சா்வதேச சந்தை விலை நிலவரத்தைக் காட்டிலும் குறைந்த விலையில் சமையல் எரிவாயுவை விற்பனை செய்ததால் எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் மட்டும் சமையல் எரிவாயு விற்பனையால் எண்ணெய் நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ. 40,500 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, வீட்டு உபோயக (14.2 கிலோ) சமையல் எரிவாயு சிலிண்டா் மீதான கலால் வரியை ரூ. 50 அளவுக்கு மத்திய அரசு உயா்த்தியது. இது, நிகழ் நிதியாண்டில் சமையல் எரிவாயுவை எண்ணெய் நிறுவனங்கள் வாங்கும் செலவுக்கும் சில்லறை விற்பனை விலைக்கும் இடையேயான இழப்பை சற்று குறைக்க உதவியது.

இந்த நிலையில், குறைந்த விலையில் சமையல் எரிவாயு விற்பனை செய்ததால் கடந்த இரு நிதியாண்டுகளில் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் வகையில், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 30,000 கோடி முதல் ரூ. 35,000 கோடி வரை மானியம் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான நடைமுறைகளை மத்திய நிதியமைச்சகம் வகுத்து வருகிறது என்றனா்.

ஏற்கெனவே, 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ. 22,000 கோடியும், 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ. 28,249 கோடியும் இதேபோன்று இழப்பீடு மானியமாக இந்த 3 எண்ணெய் நிறுவனங்களுக்கும் மத்திய அரசு வழங்கியுள்ளது.

ஹிமாசல் பருவமழைக்கு இதுவரை 92 பேர் பலி: ரூ.751.78 கோடி இழப்பு!

ஹிமாச்சலப் பிரதேசம் முழுவதும் கனமழை மற்றும் மேக வெடிப்புகளால் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மாநிலத்தில் இந்தாண்டு பருவமழை ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், ... மேலும் பார்க்க

மகளைப் பற்றி தவறான பேச்சுகள்.. டென்னிஸ் வீராங்கனை ராதிகா கொலையில் வெளியான தகவல்!

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் பற்றி பலரும் தவறாகப் பேசியதால் மனம் வேதனையடைந்து அவமானத்தால், மகளை சுட்டுக் கொன்றதாக, கைது செய்யப்பட்ட தந்தை தீபக் யாதவ் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஹர... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தும் பாஜக அரசு: பிரதமர்!

பொது மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தனது அரசு கவனம் செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தில்லியில் 51 ஆயிரம் இளைஞக்ளுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி நிய... மேலும் பார்க்க

ஒட்டுமொத்த அலட்சியம்! ஆர்சிபி கூட்டநெரிசல் குறித்த அறிக்கை தாக்கல்!!

பெங்களூரில், ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவத்துக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் என விசாரணை அறிக்கையில் தகவல்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கோப... மேலும் பார்க்க

ரூ.1.18 கோடி வெகுமதி: சத்தீஸ்கரில் 23 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் 23 நக்சல்கள் இன்று (ஜூலை 12) சரணடைந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் சரணடைந்த நக்சலைட்டுகளில் 11 மூத்த நக்சல்கள் ஆவார். அவர்களில் பெரும்ப... மேலும் பார்க்க

சாலைகளில் ஓடும் படகுகள்.. மத்திய பிரதேசத்தில் கரையைக் கடந்த மந்தாகினி ஆறு

போபால்: மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக, மந்தாகினி ஆறு கரையை கடந்து பாய்ந்ததால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் படகுகள் நீந்திச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.ராம்கட், ஜான்... மேலும் பார்க்க