செய்திகள் :

சருமத்தில் ஒவ்வாமை; உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர்; ஜிம்மில் கொடுத்த புரோட்டின் பவுடர் காரணமா?

post image

நீலகிரி மாவட்டம் குன்னூர், அட்டடி பகுதியைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. அ.தி.மு.க -வைச் சேர்ந்த இவர் தற்போது குன்னூர் நகர மன்றத்தின் உறுப்பினராகப் பதவி வகித்து வருகிறார்.

கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளியில் 12 -ம் வகுப்பு படித்து வந்த இவரின் இளைய மகன் ராஜேஷ் கண்ணா, கடந்த 31 -ம் தேதியன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் தீ வைத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ராஜேஷ் கண்ணா

கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட மாணவனை கோவையில் உள்ள மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று காலை அந்த மாணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உடற்பயிற்சிக் கூடத்தில் வழங்கப்பட்ட புரோட்டின் பவுடர் ஏற்படுத்திய ஒவ்வாமையின் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இது குறித்து தெரிவித்த மாணவனின் உறவினர்கள், "தற்கொலை செய்து கொண்ட ராஜேஷ் கண்ணா 2023 - ஆம் ஆண்டில் இருந்து குன்னூர் மவுன்ட் ரோட்டில் உள்ள ஜிம் ஒன்றில் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

ஜிம்மில் வழங்கப்பட்ட புரோட்டின் பவுடரை உட்கொண்டு வந்த காரணத்தால் சருமத்தில் கடுமையான ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. முகம் மற்றும் உடலில் ஏற்பட்ட பாதிப்புகளால் சகஜமாக நடமாட முடியாமல் தவித்து வந்தார்.

இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகி தவறான முடிவை எடுத்திருக்கிறார். உரிய விசாரணை நடத்தி ஜிம் உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது" என்றனர்.

ராஜேஷ் கண்ணா

இது குறித்து தெரிவித்துள்ள காவல்துறையினர்,

"தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். உடற்பயிற்சி கூடத்தில் வழங்கப்பட்டிருந்த புரோட்டின் பவுடரை எந்த அளவில் எடுக்க வேண்டும், எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறித்தும் மருத்துவ நிபுணர்களிடம் கேட்டறிந்து வருகிறோம்.

உடற்கூறாய்வு முடிவுகளின் அடிப்படையிலேயே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

``மதத்தையும், துறவிகளையும் அவமதித்தால்'' - திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச்சூடு; பகிரங்க மிரட்டல்

பாலிவுட் நடிகை திஷா பதானிபாலிவுட் நடிகை திஷா பதானி உத்தரபிரதேச மாநிலம் பரேலியை சேர்ந்தவர் ஆவார். அங்குள்ள வீட்டில் திஷா பதானியின் பெற்றோர் வசித்து வருகின்றனர். அந்த வீட்டின் மீது மர்ம நபர் திடீரென துப... மேலும் பார்க்க

சேலம்: ரவுடியுடன் திருமணம் மீறிய உறவிலிருந்த பெண்ணுக்கு டார்ச்சர்; முதியவர் அடித்துக் கொலை

சேலம் மாநகர் சூரமங்கலம் போடிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன் (65). விவசாயியான இவர் கடந்த 18.08.2025 அன்று வீட்டில் படுத்திருந்த போதும் மின்விசிறி கழன்று செல்லப்பன் தலையில் விழுந்ததாகக் கூ... மேலும் பார்க்க

சென்னை: கணவருக்குத் தெரியாமல் கடன்; நகைக்கடையில் திருட வந்த குடும்பத் தலைவி... கைதுசெய்த போலீஸ்!

திருவொற்றியூர், காலடிப்பேட்டை, சன்னதி தெருவில் குடியிருந்து வருபவர் தேவராஜ் ஜெயின் (54). இவர் அந்தப்பகுதியில் தங்க நகை விற்பனை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். 11.09.2025-ம் தேதி மதியம் தேவராஜ் ஜெயி... மேலும் பார்க்க

சென்னை: பைக் டாக்ஸி ஓட்டும் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை; கல்லூரி மாணவன் கைதான பின்னணி என்ன?

சென்னை, ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர், குடும்பச் சூழல் காரணமாக பைக் டாக்ஸி டிரைவராக வேலை செய்து வருகிறார். 11.09.2025-ம் தேதி மதியம், கோயம்பேடு முதல் அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. வரை செ... மேலும் பார்க்க

சென்னை: கோயம்பேட்டில் அரசு பேருந்தை திருடிய வடமாநில இளைஞர் - நெல்லூரில் சிக்கிய பின்னணி!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரசுக்கு சொந்தமான பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்தப் பேருந்தை ஓட்டிச் செல்ல டிரைவரும் கண்டக்டரும் நேற்று (11.9.2025) வந்தனர். அப்போது அங்கு பேருந்து இல்... மேலும் பார்க்க

பயன்பாடில்லாத இடத்தில் சாலை; மனு அளித்த சமூக ஆர்வலர் கார் ஏற்றிக் கொலை - பேரூராட்சித் தலைவர் கைது!

திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் கருகம்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (57). சமூக ஆர்வலரான இவர், அப்பகுதியில் உள்ள தேநீர்க் கடைக்கு புதன்கிழமை மாலை தனது இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு வீடு திரும்பிக்... மேலும் பார்க்க