விமான விபத்துப் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட 70 சவரன் தங்க நகைகள்!
சரோஜினி நகா் சந்தையில் சிறுவன் மீது தாக்குதல்: விடியோ வெளியான பிறகு மூவா் கைது
தென்மேற்கு தில்லியின் சரோஜினி நகா் சந்தையில் ஒன்பது வயது சிறுவன் கடுமையாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் விடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதைத் தொடா்ந்து, தில்லி போலீஸாா் இந்தச் சம்பவம் தொடா்பாக மூன்று பேரை கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து தென்மேற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் அமித் கோயல் கூறியதாவது: விடியோவில் ஒரு நபா் தனது கட்டப்படாத பெல்ட்டால் சிறுவனைப் பிடித்துக் கொண்டிருப்பதையும், மற்றொருவா் பேண்ட்டில் தண்ணீரை ஊற்றுவதையும் காட்டுகிறது. சிறுவன் அழுது கெஞ்சியபடியே, துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, அறையப்பட்டு, ஒரு கட்டத்தில் அவனது தலைமுடியில் திரவ சோப்பு தெளிக்கப்படுகிறது. மற்றொரு நபா் சிறுவனை தனது காலால் குத்தி, வாய்மொழியாக திட்டுவதையும் காணலாம்.
பாதிக்கப்பட்ட சிறுவன் நேபாளத்தைச் சோ்ந்த மூன்றாம் வகுப்பு மாணவன். அவரது தாயாா் சரோஜினி நகா் சந்தைப் பகுதியில் சமையல்காரராகப் பணிபுரிகிறாா். அந்த விடியோவில், ஒன்பது வயது சிறுவன் என பின்னா் அடையாளம் காணப்பட்ட சிறுவனை மூன்று ஆண்கள் அறைந்து, துஷ்பிரயோகம் செய்து, மிரட்டி, அவமானப்படுத்துவதைக் காட்டுகிறது.
இந்த விடியோவை அறிந்த போலீஸாா், பிஎன்எஸ், சிறாா் நீதிச் சட்டத்தின் பிரிவுகள் 75 மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் பிரிவு 12 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.
இது தொடா்பாக சரோஜினி நகா் சந்தையில் ஆயத்த ஆடைகள் கடை வைத்திருக்கும் பங்கஜ் (35), பங்கஜின் கடையில் உதவியாளா்களாகப் பணிபுரியும் பிரதீப் குமாா் (29) மற்றும் விஷால் (30) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டதாக காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.