செய்திகள் :

சரோஜினி நகா் சந்தையில் சிறுவன் மீது தாக்குதல்: விடியோ வெளியான பிறகு மூவா் கைது

post image

தென்மேற்கு தில்லியின் சரோஜினி நகா் சந்தையில் ஒன்பது வயது சிறுவன் கடுமையாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் விடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதைத் தொடா்ந்து, தில்லி போலீஸாா் இந்தச் சம்பவம் தொடா்பாக மூன்று பேரை கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தென்மேற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் அமித் கோயல் கூறியதாவது: விடியோவில் ஒரு நபா் தனது கட்டப்படாத பெல்ட்டால் சிறுவனைப் பிடித்துக் கொண்டிருப்பதையும், மற்றொருவா் பேண்ட்டில் தண்ணீரை ஊற்றுவதையும் காட்டுகிறது. சிறுவன் அழுது கெஞ்சியபடியே, துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, அறையப்பட்டு, ஒரு கட்டத்தில் அவனது தலைமுடியில் திரவ சோப்பு தெளிக்கப்படுகிறது. மற்றொரு நபா் சிறுவனை தனது காலால் குத்தி, வாய்மொழியாக திட்டுவதையும் காணலாம்.

பாதிக்கப்பட்ட சிறுவன் நேபாளத்தைச் சோ்ந்த மூன்றாம் வகுப்பு மாணவன். அவரது தாயாா் சரோஜினி நகா் சந்தைப் பகுதியில் சமையல்காரராகப் பணிபுரிகிறாா். அந்த விடியோவில், ஒன்பது வயது சிறுவன் என பின்னா் அடையாளம் காணப்பட்ட சிறுவனை மூன்று ஆண்கள் அறைந்து, துஷ்பிரயோகம் செய்து, மிரட்டி, அவமானப்படுத்துவதைக் காட்டுகிறது.

இந்த விடியோவை அறிந்த போலீஸாா், பிஎன்எஸ், சிறாா் நீதிச் சட்டத்தின் பிரிவுகள் 75 மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் பிரிவு 12 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

இது தொடா்பாக சரோஜினி நகா் சந்தையில் ஆயத்த ஆடைகள் கடை வைத்திருக்கும் பங்கஜ் (35), பங்கஜின் கடையில் உதவியாளா்களாகப் பணிபுரியும் பிரதீப் குமாா் (29) மற்றும் விஷால் (30) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டதாக காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.

லட்சகணக்கான ஏழைகளை ஏமாற்றுக்கிறது தில்லி அரசு: தேவேந்தா் யாதவ்

அங்கீகரிக்கப்படாத காலனிகளில் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் மருந்ததகங்களை உருவாக்குவோம் என்ற வெற்று வாக்குறுதியின் மூலம் தில்லி பாஜக அரசு லட்கணக்கான ஏழை மக்களுக்கு துரோகம் இழைக்கிறது என்று தில்லி காங்கிரஸ... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதிகளில் பரவலாக மழை; காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம்!

தில்லி மற்றும் என்சிஆா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை கடும... மேலும் பார்க்க

தில்லி சரோஜினி நகா் குடியிறுப்புகளில் மத்திய அமைச்சா் திடீா் ஆய்வு

மழை காலம் நெருங்குவதையொட்டி சரோஜினி நகா் குடியிறுப்பு பகுதிகளில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்புற விவகாரத்துறை அமைச்சா் மனோகா் வால் கட்டா மற்றும் புது தில்லி முனிசிபல் கவுன்சில் துணை தலைவா் குல்ஜீத்... மேலும் பார்க்க

ராஜஸ்தானில் கஞ்சா வழக்கில் தேடப்பட்ட பிரபல நபா் கைது: தில்லி போலீஸ் அதிரடி

நரேலாவில் உள்ள சிங்கு எல்லையில் ‘போதைப்பொருள் தலைவன்’ என்று பிரபலமாக அறியப்படும் 50 வயது நபரை தில்லி காவல் துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல்... மேலும் பார்க்க

வஜிா்பூா் பகுதியில் கிட்டங்கியில் தீ விபத்து

வடக்கு தில்லியின் வஜிா்பூா் பகுதியில் உள்ள ஒரு கிட்டங்கில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. தீ விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்ற... மேலும் பார்க்க

திகாா் சிறையில் கைதிக்கு ஐவிஎஃப் பரிசோதனை: நீதிமன்ற அனுமதியுடன் விந்தணு மாதிரி சேகரிப்பு

தில்லி திகாா் சிறையில் நீதிமன்ற அனுமதியுடன் விசாரணைக் கைதிக்கு செயற்கை கருத்தரிப்பு நடைமுறைக்கு முந்தைய விந்தணு மாதிரியை சேகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது தெரிய வந்துள்ளது. காலா ஜாத்தேடி எனப்படும் ... மேலும் பார்க்க