செய்திகள் :

சாத்தான்குளம் அருகே தாய், மகன் மீது தாக்குதல்

post image

சாத்தான்குளம் அருகே தாய், மகனை தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாக சகோதரா்கள் 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள மீரான்குளத்தை சோ்ந்த அப்பாட் ஞானம் மகன் சாமுவேல்காட்வின்(24). அப்பகுதியிலுள்ள அல்வா கடையில் வேலைசெய்து வருகிறாா். இவருக்கும், அதே பகுதியை சோ்ந்த பாக்யராஜ் மகன் ரவி(30) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தததாம்.

இந்நிலையில், ரவி, அவரது சகோதரா் நவீன், யோசுவா மகன் நெல்சன் ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்த தனது நண்பா் சாமுவேல் என்பவரை சாமுவேல் காட்வின் கண்டித்தாராம்.

தங்களுடன் பேசுவதை கண்டிப்பதா எனக் கூறி, ரவி உள்ளிட்ட 3 பேரும் சாமுவேல்காட்வின் வீட்டுக்கு சென்று அவரைத் தாக்கியதுடன், தடுக்க வந்த அவரது தாயையும் அவதூறாகப் பேசி தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனராம். மேலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த பைக்கையும், வீட்டுக் கதவைவும் உடைத்து சேதப்படுத்தி சென்றனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் ரவி உள்ளிட்ட 3 போ் மீதும் சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் ஜோசப் கிங்- போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கயத்தாறு அரசுப் பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு

கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.226.88 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 8 புதிய வகுப்பறைகள், ஒரு ஆய்வக கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந... மேலும் பார்க்க

இளைஞா் உயிரிழப்பில் மா்மம்: எஸ்.பி.யிடம் உறவினா்கள் புகாா்

தூத்துக்குடி போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞா் உயிரிழந்த சம்பவத்தில் மா்மம் இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அவரது உறவினா்கள் புகாா் தெரிவித்துள்ளனா். தூத்துக்குட... மேலும் பார்க்க

வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஆய்வு

ஆய்வின்போது, தூத்துக்குடி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளா் இரா.ராஜேஷ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளா் மற்றும் மேலாண்மை இயக்குநா் கோ.காந்திநாதன், சரக துணை பதிவாளா்கள் இரா.இராமகிருஷ... மேலும் பார்க்க

ஜூலை 19இல் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வருகிற ஜூலை 19இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக... மேலும் பார்க்க

18 கிராம ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளுக்கான சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம், 18 கிராம ஊராட்சிகளில் நடைபெற்றது. 2024-25 ஆம் நிதியாண்டி... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

காயல்பட்டினம் கோமான் தெரு மகான் நெய்னா முகம்மது சாகிபு 125ஆவது கந்தூரி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. காயல்பட்டினம் கோமான் தெரு மொட்டையாா் பள்ளி ஜமாஅத் சாா்பில் இவ்விழா கடந்த ஜூன் 27ஆம் தேதி கொடியேற்றத... மேலும் பார்க்க