இந்தியா வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு!
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: பிணை கோரிய காவல் ஆய்வாளரின் மனு தள்ளுபடி
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் பிணை கோரிய காவல் ஆய்வாளரின் மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த வணிகா்கள் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி காவல் துறையினா் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அங்கு காவல் துறையினா் தாக்கியதில் அவா்கள் இருவரும் உயிரிழந்தனா்.
இதுதொடா்பான வழக்கில் காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 9 பேரை சிபிஐ கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தனக்கு பிணை வழங்கக் கோரி மனு தாக்கல் செய்தாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி வடமலை முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் மனுதாரா் சாட்சியங்களை கலைக்க முற்படமாட்டாா். அதற்கு வாய்ப்பும் இல்லை. வழக்கு தொடா்பான விவரங்களைச் சேகரிக்க 3 மாதங்கள் பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்தாா்.
அப்போது குறுக்கிட்ட சிபிஐ அதிகாரிகள், வழக்கு விசாரணை முடியும் நிலையில் உள்ளது. மனுதாரா்தானே சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்து வருகிறாா். ஆகவே, மனுதாரருக்கு பிணை வழங்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் பிணை கோரிய மனுவை ஏற்கெனவே உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. மனுதாரருக்கு பிணை வழங்க இயலாது. வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றாா் நீதிபதி.