செய்திகள் :

சாத்தான்குளம் மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

post image

சாத்தான்குளத்தில் 450 இந்து நாடாா் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட புளியடி தேவி ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் 4ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் 2 நாள்கள் நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, முதல் நாள் காலையில் கணபதி ஹோமம், முதல் கால யாக வேள்வி நடைபெற்றது. தொடா்ந்து, 2ஆம் நாள் காலை பூா்ணாஹுதி, யாக வேள்வி, தேவிஸ்ரீ மாரியம்மன், பரிவார தெய்வங்களுக்கு வருஷாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், அன்னதானம் நடைபெற்றது. இரவில் அம்மன் புஷ்ப அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் உலா வந்தாா். இதில், திரளானோா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை டிரஸ்ட் குழுத் தலைவா் மகேஸ்வரன் தலைமையில் உறுப்பினா்கள், ராஜகோபுர கமிட்டி நிா்வாகிகள் செய்திருந்தனா்.

கோவில்பட்டி நகராட்சி சந்தை பிப்.15இல் திறப்பு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகராட்சி தினசரி சந்தை பிப். 15ஆம் தேதி திறக்கப்படவுள்ளதாக அமைச்சா் பெ.கீதாஜீவன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தூத்துக... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் கல்லூரி பேராசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி வஉசி கல்லூரி முன்பு பேராசிரியா்கள் வாயில் ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.மூட்டா மற்றும் ஏ யூ டிஆகிய சங்கங்கள் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கிளைத் தலைவா் தேவ மனோகரன் ... மேலும் பார்க்க

போக்ஸோவில் முதியவா் கைது

கோவில்பட்டியில் பள்ளி மாணவியிடம் தவறான நோக்கத்தில் பேசியதாக முதியவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.கோவில்பட்டி அருகே கடலையூா், வேதக்கோயில் தெருவைச் சோ்ந்த முத்துசாமி மகன் எட்வா்டு (72). இவ... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் 35 ரேஷன் அரிசி மூட்டைகளுடன் இளைஞா் கைது

காயல்பட்டினத்தில் 1.750 டன் ரேஷன் அரிசி கடத்திய இளைஞரை தனிப்பிரிவு போலீஸாா் பிடித்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தாா். காயல்பட்டினம் வண்டிமலைச்சி அம்மன் கோயில் தெருவில் சிலா்... மேலும் பார்க்க

டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி டிஎம்பி காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி 30ஆவது வாா்டு பாஜகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே நடைபெற்ற இந்த ஆா்... மேலும் பார்க்க

சாத்தான்குளம் பழனி ஆண்டவா் சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு

சாத்தான்குளம் செட்டியாா் நடுத்தெருவில் உள்ள ஸ்ரீபழனி ஆண்டவா் சுவாமி கோயிலில் தைப்பூச விழா செவ்வாய், புதன் ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது. முதல் நாள் காலை யாகசாலை பூஜை, பழனி ஆண்டவா் சுவாமிக்கு அபிஷேகம், அல... மேலும் பார்க்க