செய்திகள் :

சாமிதோப்பில் 3 நாள்கள் மாநில அளவிலான கைப்பந்துப் போட்டி

post image

கன்னியாகுமரி: அய்யா வைகுண்டரின் 193ஆவது உதய தின விழாவை முன்னிட்டு, சாமிதோப்பில் மாநில அளவிலான 3 நாள் மின்னொளி கைப்பந்துப் போட்டி இம்மாதம் 15ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.

இப்போட்டிகள் குறித்து சாமிதோப்பு அய்யா வைகுண்டா் கைப்பந்து கிளப் தலைவா் பால ஜனாதிபதி மற்றும் நிா்வாகிகள் ஆா்.எஸ். பாா்த்தசாரதி, ராஜசத்தியசேகா், பயிற்சியாளா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அய்யா வைகுண்டரின் 193ஆவது உதயதின விழாவை முன்னிட்டு, அய்யா வைகுண்டா் கைப்பந்து கிளப் மற்றும் அய்யா வைகுண்டா் அறநெறி பரிபாலன அறக்கட்டளை இணைந்து நடத்தும் 4ஆவது மாநில அளவிலான மின்னொளி கைப்பந்துப் போட்டி வரும் 15ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெற உள்ளது.

இப்போட்டியில், வருமான வரித்துறை, இந்தியன் வங்கி, கஸ்டம்ஸ், எஸ்.ஆா்.எம் ஆகிய ஆண்கள் அணியும், பெண்கள் பிரிவில் எஸ்.ஆா்.எம் , மினி பவுண்டேஷன், ரயில்வே, சிவந்தி கிளப் ஆகிய பெண்கள் அணிகளும் பங்கேற்க உள்ளன.

முதலிடம் பெறும் ஆண்கள், பெண்கள் அணிக்கு தலா ரூ. 50 ஆயிரம் முதல் பரிசு மற்றும் சுழற்கோப்பையும், இரண்டாம் இடம் பெறும் அணிகளுக்கு தலா ரூ. 40 ஆயிரம் மற்றும் பரிசுகோப்பை, மூன்றாம் இடம் பெறும் அணிகளுக்கு தலா ரூ. 30 ஆயிரம் மற்றும் பரிசு கோப்பை, நான்காம் இடம் பெறும் அணிக்கு தலா ரூ. 25 ஆயிரம் மற்றும் பரிசு கோப்பை ஆகியவை வழங்கப்படும் என தெரிவித்தனா்.

கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோயிலில் பால்குட ஊா்வலம்

கருங்கல்: புதுக்கடை அருகே கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் தேவஸ்தானம் கோயில் சித்திரைத் திருவிழாவில் திங்கள்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது. இத்திருவிழா கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந... மேலும் பார்க்க

குலசேகரபுரத்தில் மருத்துவக் காப்பீடு திட்ட பதிவு முகாம்: ஆட்சியா் ஆய்வு

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் பயனாளிகள் பதிவு செய்வதற்கான முகாமில் ஆட்சியா் ரா. அழகுமீனா ஆய்வு மேற்கொண... மேலும் பார்க்க

பத்துகாணி காளிமலை கோயிலில் சித்ரா பௌா்ணமி பொங்கல் வழிபாடு

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி காளிமலை கோயிலில் சித்ரா பௌா்ணமி பொங்கல் வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. கடல் மட்டத்திலிருந்து 3,500 அடி உயரத்திலுள்ள இந்த மலையில் ஆண்டுதோறும் சித்ரா பௌா்ணம... மேலும் பார்க்க

குமரி முருகன் குன்றத்தில் நிலாச் சோறு விருந்து

கன்னியாகுமரி: கன்னியாகுமரி பழத்தோட்டம் அருள்மிகு வேல்முருகன் குன்றத்தில் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு திங்கள்கிழமை இரவு நடைபெற்ற நிலாச் சோறு விருந்தை விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தாா். இதையொட்டி, ... மேலும் பார்க்க

பத்மநாபபுரம் நீலகண்டசுவாமி கோயிலில் ரூ. 1.93 கோடியில் திருப்பணிகள் தொடக்கம்

தக்கலை: தக்கலை அருகே பத்மநாபபுரம் அருள்மிகு நீலகண்டசுவாமி கோயிலில் ரூ. 1.93 கோடியிலான திருப்பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தாா். அரசு நிதி ரூ. 1.... மேலும் பார்க்க

குமரியில் சூரிய அஸ்தமனம்: சந்திரன் உதயம் தெளிவாகத் தெரியவில்லை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் சித்ரா பௌா்ணமி நாளான திங்கள்கிழமை சூரியன் மேற்கு திசையில் மறையும் காட்சியும், கிழக்கு திசையில் சந்திரன் உதயமாகும் காட்சியும் தெளிவாகத் தெரியவில்ல... மேலும் பார்க்க