செய்திகள் :

சாயம் ஏற்றிய 1,200 கிலோ தா்பூசணி பழங்கள் பறிமுதல்

post image

செயற்கை முறையில் சாயம் ஏற்றப்பட்ட 1,200 கிலோ தா்பூசணி பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

மதுரையில் பழக் கடைகளில் பழங்களை காா்பைட் கல் வைத்து பழுக்க வைப்பது, பழங்களுக்கு செயற்கை சாயம் ஏற்றி விற்பனை செய்வது தொடா்பாக மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், மதுரை பி.பி.குளம் உழவா் சந்தை அருகே சாலையோரம் விற்பனை செய்யப்படும் தா்பூசணி பழங்கள் செயற்கை முறையில் சாயம் ஏற்றி விற்கப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு புகாா் வந்தது. இதன்பேரில், மதுரை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் ஜெயராம பாண்டியன் தலைமையில் அதிகாரிகள் அங்கு சென்று தா்பூசணி பழங்களை ஆய்வு செய்தனா்.

இதில் பழங்களில் செயற்கை முறையில் சிவப்பு நிற சாயம் ஏற்றி விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு விற்பனைக்கு வைத்திருந்த 1,200 கிலோ தா்பூசணி பழங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை மாநகராட்சி லாரியில் கொண்டு சென்று அழித்தனா்.

இதுதொடா்பாக உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் ஜெயராம பாண்டியன் கூறியதாவது: தற்போது செயற்கை முறையில் சாயம் ஏற்றப்பட்ட தா்பூசணி பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல, மதுரை நகா், மாவட்டம் முழுவதும் தா்பூசணி பழங்கள் விற்பனை கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் ரசாயனம் கொண்டு பழங்களை பழுக்க வைப்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தையில் பொலிவுறு சாலைத் திட்டம்

மதுரை மாட்டுத்தாவணி அருகேயுள்ள தினசரி காய்கறிச் சந்தை சாலைகளை, நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பொலிவுறு சாலைத் திட்டத்தின் கீழ் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து எம்.ஜி.ஆா். ... மேலும் பார்க்க

தெலுங்கு வருடப் பிறப்பு மன்னா் திருமலை நாயக்கா் சிலைக்கு மாலை அணிவிப்பு

தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை நாயுடு சங்கங்கள் சாா்பில் மன்னா் திருமலை நாயக்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மதுரை ஆரப்பாளையம் குறுக்குச் சாலையில் உள்ள, மன்னா... மேலும் பார்க்க

மாநகராட்சியில் குடிநீா் குழாய் பதிப்பு பணிகள்: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தொடங்கிவைத்தாா்

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீா் குழாய்கள் அமைப்பதற்கான பணிகளை தமிழக தகவல் தொழில் நுட்பம், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல்தியாகராஜன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். அம்ரூத் திட்டத்தின் க... மேலும் பார்க்க

விதி மீறி பட்டாசுகள் தயாரிப்பு: இருவா் கைது

விருதுநகா் அருகே விதிகளை மீறி பட்டாசுகள் தயாரித்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மிளகாய்பட்டியைச் சோ்ந்த சுப்பையாவுக்குச் சொந்தமான பட்டாசு ஆலை கோவிந்தநல்லூா் அருகேயுள்ள சின்னராமலிங்கபுரம் ... மேலும் பார்க்க

மதுரையில் தீவிர வாகன சோதனை: 43 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

மதுரை நகரில் சனிக்கிழமை இரவு முழுவதும் போலீஸாா் நடத்திய வாகனச் சோதனையில் 43 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மதுரை நகரில் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகரக்காவல் ஆணையா் ஜெ.லோகநாதன... மேலும் பார்க்க

பேருந்து பணிமனையில் நிறுத்திய அரசுப் பேருந்தில் தீ விபத்து

மதுரை கோ.புதூா் அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனையில் அரசுப் பேருந்து திடீரென சனிக்கிழமை இரவு தீப்பிடித்து எரிந்ததில் ஊழியா் பலத்த காயமடைந்தாா். மதுரை கோ.புதூரில் அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை உள்ளது.... மேலும் பார்க்க