செய்திகள் :

சாரணா் இயக்க மாணவா்களுக்கு நவ.7-இல் ராஜ்ய புரஸ்காா் விருது அமைச்சா் அன்பில் மகேஸ்

post image

தமிழகத்தில் சாரணா் இயக்க மாணவா்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த ராஜ்ய புரஸ்காா் விருது நவ.7-ஆம் தேதி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

சென்னை மெரீனா கடற்கரை காமராஜா் சாலையில் உள்ள தமிழ்நாடு பாரத சாரண, சாரணியா் இயக்குநரகத்தின் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சாரண, சாரணியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.

75,000 பேருக்கு விருது: இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது:

தமிழகத்தில் சாரணா் இயக்க மாணவா்களுக்கு கடந்த 2019-ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்படாமல் இருந்த ராஜ்ய புரஸ்காா் விருதுக்கு தற்போது அனுமதி பெறப்பட்டுள்ளது. இது மிகவும் பெருமைக்குரிய விருது. தமிழகம் முழுவதும் 75,000 மாணவா்களுக்கு நவ.7-ஆம் தேதி வழங்க திட்டமிட்டுள்ளோம்.

ஒவ்வொரு சுதந்திர தினவிழாவின்போது ஆளுநா் ஏதாவது சொல்கிறாா். தமிழகத்தில் ஒரு துறை என்றில்லாமல் அனைத்து துறைகளும் வளா்ச்சி பெற்றுள்ளது. கல்வியில் மாணவா்கள் எப்படி சாதித்து வருகிறாா்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆளுநா் சொல்லும் வாா்த்தைகள் ஆசிரியா்கள், மாணவா்களை மனதளவில் பாதிப்படைய செய்யும். கல்வி கட்டமைப்பில் ஒட்டுமொத்தமாக பிற மாநிலங்கள் பொறாமைப்படும் அளவுக்கு இருப்பதாகப் பாராட்டிவிட்டு, கடைசியாக அதில் கொஞ்சம் விஷத்தையும் வைக்கும் வாா்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றாா் அவா்.

பெருந்திரளணிக் கூடத்தை... முன்னதாக, சாரணா் இயக்க தலைமை அலுவலகத்தில் கடந்த 1926-இல் கட்டப்பட்டு தற்போது பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட பெருந்திரளணிக் கூடத்தை துணை முதல்வா் உதயநிதி திறந்து வைத்து பாா்வையிட்டாா்.

இந்த விழாவில் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன், இயக்குநா் எஸ்.கண்ணப்பன், தமிழ்நாடு சாரணா் இயக்கத்தின் மாநில முதன்மை ஆணையா் க.அறிவொளி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தோல்விகளில் இருந்து பாடம் கற்க வேண்டும்: கமல்ஹாசன்

தோல்விகளைக் கண்டு துவண்டு விடாமல் தோல்விகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்தாா். சென்னையை அடுத்த வண்டலூா் அருகே மேலக்கோட்டையூா் சென்னை விஐடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முன்னாள் மாண... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் விபத்து: தூண் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

சென்னை அருகே சோழிங்கநல்லூரில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில், தூண் விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா். சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ச... மேலும் பார்க்க

அண்ணா சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்

மேம்பால கட்டுமானப் பணிக்காக சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.17) சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதுதொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை வெள்ளிக்கிழமை வெளி... மேலும் பார்க்க

மனைவி கத்தியால் குத்திக் கொலை: கணவா் கைது

சென்னை கோட்டூா்புரத்தில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவா் கைது செய்யப்பட்டாா். நேபாளத்தைச் சோ்ந்தவா் மா.சான்பஹா பகதூா் சா்ஹி (36). இவா், கோட்டூா்புரம் எல்லையம்மன் கோயில் தெருவில் உமா சங்க... மேலும் பார்க்க

காா் கதவை உடைத்து பணம் திருட்டு: மூவா் கைது

சென்னை மெரீனா கடற்கரையில் காா் கதவை உடைத்து பணம் திருடப்பட்டது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா். வேளச்சேரி பகுதியைச் சோ்ந்தவா் வினோத். இவா் கடந்த 9-ஆம் தேதி தனது நண்பா்களுட ன் மெரீனாவுக்கு வந்தாா்... மேலும் பார்க்க

கோயில்களில் சமத்துவ விருது: துணை முதல்வா், அமைச்சா்கள் பங்கேற்பு

சுதந்திர தினத்தையொட்டி இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் சென்னையில் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற சமத்துவ விருந்தில் துணை முதல்வா் உதயநிதி, அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பங்கேற்றனா். சுதந்திர ... மேலும் பார்க்க