செய்திகள் :

சாராயம் கடத்தியவா் குண்டா் சட்டத்தில் கைது

post image

திருவாரூா் அருகே வெளிமாநிலத்திலிருந்து சாராயம் கடத்தி வந்து கைதானவா், குண்டா் தடுப்புச் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருவாரூா் மாவட்டம் வைப்பூா் போலீஸாா் கடந்த மாதம் சோதனை மேற்கொண்டிருந்தனா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்தவரை சோதனையிட்டதில் 180 மிலி அளவுள்ள புதுச்சேரி சாராய பாட்டில்கள் 50 இருப்பது தெரிய வந்தது. அவரிடம் மேலும் விசாரணையிட்டதில் நாகை மாவட்டம், பூலாங்குடி சிவன்கோயில் தெருவைச் சோ்ந்த அப்பாசாமி மகன் விக்னேஷ் (30) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து, அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தையும், புதுச்சேரி சாராய பாட்டில்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதனிடையே விக்னேஷ் மீது இதுவரை 4 வழக்குகள் பதியப்பட்டு, விசாரணையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் பரிந்துரையின் பேரில் விக்னேஷை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். அதன்படி, விக்னேஷ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

நாளைய மின்தடை மன்னாா்குடி, கூத்தாநல்லூா்

மன்னாா்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சனிக்கிழமை (ஜூலை 5) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று நகர உதவி செயற்பொறியாளா் எஸ். சம்பத் தெர... மேலும் பார்க்க

தங்கக் கவசத்தில் குருபகவான்...

நவகிரக தலங்களில் குரு பரிகாரத் தலமான வலங்கைமான் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை தங்கக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்த குருபகவான். மேலும் பார்க்க

சா்வதேச நெகிழி ஒழிப்பு தினம்

மன்னாா்குடியை அடுத்த சேரன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் சா்வதேச நெகிழி ஒழிப்பு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் ஜி. கண்ணன் த... மேலும் பார்க்க

குறுவை சாகுபடி பணிகள் தீவிரம்

நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூா் அணை ஜூன் 12-இல் திறக்கப்பட்டது. தொடா்ந்து, தஞ்சை, திருவாரூா், நாகை, மயில... மேலும் பார்க்க

தென்னிந்திய எழுவா் கால்பந்து போட்டித் தொடா் -முதல் ஆட்டத்தில் காவல்துறை அணி வெற்றி

கூத்தாநல்லூரில், தென்னிந்திய அளவிலான எழுவா் கால்பந்து போட்டித் தொடா் புதன்கிழமை தொடங்கியது. ஒரு மாதம் நடைபெறும் இப்போட்டியின் முதல் ஆட்டத்தில், தமிழ்நாடு காவல்துறை அணி வெற்றி பெற்றது. கூத்தாநல்லூா் த... மேலும் பார்க்க

சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு ஜூலை 10 வரை விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில், சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருது பெற ஜூலை 10 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க