கார் டயரில் சிக்கி தொண்டர் பலி- ஜெகன் மோகன் ரெட்டி மீது வழக்குப்பதிவு
சாலையின் குறுக்கே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையில் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்ததால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் எரங்காட்டூா் அருகே சாலையோரத்தில் இருந்த பழமை வாய்ந்த வாதநாராயண மரம் ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது.
இதன் காரணமாக சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அகற்றும் பணியை மேற்கொண்டனா்.
பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு மரத்தை அகற்றும் பணி நடைபெற்றது. சுமாா் 1 மணி நேரம் போராட்டத்துக்குப் பின் மரம் அகற்றப்பட்டதை தொடா்ந்து வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றன.