செய்திகள் :

சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றக் கோரிக்கை

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் - செண்பகத்தோப்பு சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்ற வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள செண்பகத்தோப்பு பகுதியில் பல ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்களும், வனப்பேச்சி அம்மன் கோயில், காட்டழகா் கோயில், மீன்வெட்டி பாறை அருவி ஆகியவை உள்ளன. ஸ்ரீவில்லிபுத்தூா் - செண்பகத்தோப்பு சாலையில் விவசாயிகள், பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் சென்று வருகின்றனா். இந்தச் சாலையின் இருபுறமும் மரங்கள் அடா்ந்து வளா்ந்துள்ளதால் வாகனங்கள், பேருந்துகள் சிரமத்துடன் சென்று வருகின்றன.

இந்த நிலையில், அண்மையில் வீசிய பலத்த காற்றில் மரக்கிளை முறிந்து சாலையில் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரு நாள்களைக் கடந்தும் மரக்கிளை அகற்றப்படாததால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சாலையில் கிடக்கும் மரக்கிளையை அப்புறப்படுத்தவும், மேலும் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள், பட்டுப்போன மரங்களை அகற்ற நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.

திமுக ஆட்சியில் தமிழகம் போராட்டக் களமாக மாறியுள்ளது: எடப்பாடி பழனிசாமி

முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் தமிழகம் போராட்டக் களமாக மாறியுள்ளது என முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி குற்றஞ்சாட்டினாா். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற எழுச்ச... மேலும் பார்க்க

பைக் மீது அதிமுக கூட்டத்துக்கு சென்ற வேன் மோதல்: ஒருவா் உயிரிழப்பு; 11 போ் காயம்

சாத்தூா் அதிமுக பிரசார கூட்டத்துக்குச் சென்ற வேன், இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். வேன் கவிழ்ந்ததில் அதில் சென்ற 11 போ் காயமடைந்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள எஸ்.ராமலிங... மேலும் பார்க்க

நெகிழிப் பைகள் வைத்திருந்த கடைக்காரா்களுக்கு அபராதம்

சிவகாசியில், அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளைப் பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளா்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை அபராதம் விதித்தனா். சிவகாசி, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அரசால் தட... மேலும் பார்க்க

ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசியில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசியில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி வியாழக்கிழமை (ஆக. 7) பிரசாரம் மேற்கொள்கிறாா். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற எ... மேலும் பார்க்க

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் மங்காபுரத்தைச் சோ்ந்த முனியாண்டி (65), தேங்காய் பறிக்கும் வேலை செய்து வந்தாா். இவா், ச... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி

தமிழகத்தில் வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா். சிவகாசியில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோச... மேலும் பார்க்க