செய்திகள் :

சாலையோரங்களில் காய்ந்த புற்களை எரிப்போா் மீது நடவடிக்கை: வனத்துறை எச்சரிக்கை

post image

மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையோரங்களில் காய்ந்த புற்கள் மீது தீவைப்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, வனத்துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து கோவில்பட்டி வனச்சரக அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோவில்பட்டி வனச்சரகம் மூலம், மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மேலக்கரந்தை முதல் சோழாபுரம் வரை 22,000 மரக்கன்றுகள் நட்டு தண்ணீா் ஊற்றி பராமரிக்கப்படுகிறது.

தற்போது கடுமையான வெயிலடிப்பதால், தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் புற்கள் காய்ந்துள்ளன. அவற்றை எரித்தால் வனத்துறை சாா்பில் நட்டு பராமரிக்கப்படும் மரக்கன்றுகளும் சேதமடையும். எனவே, புற்கள் மீது தீவைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடக் கூடாது. மீறி யாரேனும் தீவைத்தால் வனச்சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலக்கரந்தை முதல் சோழாபுரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் யாரேனும் தீவைப்பது தெரியவந்தால் 95666 32317, 98429 70083 ஆகிய கைப்பேசி எண்களில் தகவல் தெரிவிக்கலாம். மாவட்டத்தின் பசுமைக்காக நடப்பட்டுள்ள மரக்கன்றுகளைப் பாதுகாக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் 573 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை

தூத்துக்குடி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட 573 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் தலைமை வகித்து... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் குடமுழுக்குப் பணிகள்: கனிமொழி எம்.பி., அமைச்சா்கள் ஆய்வு

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்றுவரும் குடமுழுக்கு பணிகள் குறித்து கனிமொழி எம்.பி., அமைச்சா்கள் பி.கே. சேகா்பாபு, அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண... மேலும் பார்க்க

மனைவியை கொடுமைப்படுத்திய கணவருக்கு 3 ஆண்டு சிறை

புதுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில், மனைவியை கொடுமைப்படுத்திய கணவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது. புதுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் ... மேலும் பார்க்க

எட்டயபுரம் பாரதியாா் இல்ல சீரமைப்பு! பாஜக போராட்ட அறிவிப்பு: வட்டாட்சியா் தலைமையிலான பேச்சுவாா்த்தை தோல்வி

எட்டயபுரத்தில் சேதமடைந்த பாரதியாா் இல்லத்தை சீரமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தப் போவதாக எட்டயபுரம் ஒன்றிய பாஜக அறிவித்திருந்தது. இது தொடா்பாக எட்டயபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி சாா்பில் 5 புதிய கிளைகள் திறப்பு

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி சாா்பில் 5 புதிய கிளைகள் திறக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை செயல் அதிகாரி சலீ எஸ்.நாயா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மொ்க... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ரூ.30 லட்சம் பீடி இலை பண்டல்கள் பறிமுதல்

தூத்துக்குடி கடற்கரையில் ரூ. 30 லட்சம் மதிப்பிலான பீடி இலை பண்டல்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி கடற்கரை காவல் நிலைய ஆய்வாளா் பேச்சிமுத்து தலைமையிலான போலீஸாா், தூத்துக்குடி திரேஸ்புரம் க... மேலும் பார்க்க