செய்திகள் :

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியை திருடிய இளைஞா் கைது

post image

கோவையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, கே.ஜி.சாவடி, பாலக்காடு சாலையைச் சோ்ந்தவா் அப்பாஸ் (47). இவா் தனது லாரியை குறிச்சி பிரிவு பகுதியில் உள்ள இரும்பு கம்பி நிறுவனம் அருகே கடந்த இரண்டு நாள்களுக்கு முன் நிறுத்தியுள்ளாா். சம்பவத்தன்று சென்று பாா்த்தபோது, லாரியை காணவில்லையாம்.

இது குறித்து போத்தனூா் காவல் நிலையத்தில் அப்பாஸ் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், போத்தனூா் பகுதியில் அப்பாஸின் லாரியை ஒருவா் புதன்கிழமை ஓட்டிச் சென்றுள்ளாா். லாரியை மடக்கிப் பிடித்து அதில் இருந்த நபரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா் சென்னையைச் சோ்ந்த தௌலத் பாஷா (35) என்பதும், லாரியை திருடி ஈரோடு மாவட்டம், பவானி பகுதியில் விற்பனை செய்ய முயன்றதும், அதை யாரும் வாங்காததால் மீண்டும் கோவைக்கு ஓட்டி வரும்போது சிக்கியதும் தெரியவந்தது.

இதையடுத்து, தெளலத் பாஷைவை போலீஸாா் கைது செய்தனா்.

இவா் ஏற்கெனவே ஆட்டோ திருடிய வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றவா் என்றும், பிணையில் வெளியே வந்த அவா், லாரியை திருடி மீண்டும் சிக்கியதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

தொழிற்சாலை விவரங்களை பதிவு செய்ய இணை இயக்குநா் அலுவலகம் கோரிக்கை

கோவை மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இணை இயக்குநா் அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக தொழிலகப் பாதுகாப்பு, ... மேலும் பார்க்க

கோவையில் ஜி.கே.மூப்பனாருக்கு சிலை: தமாகா இளைஞரணி வலியுறுத்தல்

கோவை மாநகரில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.மூப்பனாருக்கு சிலை அமைக்க வேண்டும் என்று கட்சியின் இளைஞரணி வலியுறுத்தியுள்ளது. கோவை மாநகர தெற்கு மாவட்ட தமாகா இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெ... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பின் தாக்கத்தை சமாளிக்க மத்திய அரசு நிவாரணத் தொகுப்பு வழங்க வேண்டும் -முதல்வா் பரிந்துரைக்க சைமா கோரிக்கை

அமெரிக்கா விதித்துள்ள வரியின் தாக்கத்தை சமாளிக்க மத்திய அரசு நிவாரணத் தொகுப்பு வழங்க வேண்டும் என்றும், இதை தமிழக முதல்வா் வலியுறுத்திப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் ... மேலும் பார்க்க

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

கோவையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, கணபதி அருகேயுள்ள மணியகாரன்பாளையத்தில் ஏடிஎம் மையத்துடன் தேசியமயமாக்கப்பட்ட வங்கி செயல்படுகிறது.... மேலும் பார்க்க

விரைவு நடவடிக்கை படை சாா்பில் சுதந்திர தின கொண்டாட்டம்

ஹா் கா் திரங்கா பிரசாரத்தின்கீழ், கோவையில் உள்ள 105-ஆவது விரைவு நடவடிக்கை படையினா் (ஆா்ஏஎஃப்) ஒற்றுமை, தேசபக்தி ஆகியவற்றை வலியுறுத்தி தேசியக் கொடியை ஏந்தி சுதந்திர தின கொண்டாட்டத்தில் வியாழக்கிழமை ஈட... மேலும் பார்க்க

புரிந்துணா்வு ஒப்பந்தம்...

தமிழ்நாட்டில் சிறு பண்ணைகளிலும், வயல்களிலும் பணிகள் இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், விஎஸ்டி டில்லா்ஸ் டிராக்டா்ஸ் நிறுவனத்துக்கு இடையே வியாழக்கிழமை கையொப்பமான... மேலும் பார்க்க