செய்திகள் :

சாலையோர கால்வாயை மூட பொதுமக்கள் கோரிக்கை

post image

பள்ளப்பட்டியில் திறந்து கிடக்கும் சாலையோர கால்வாயை மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பள்ளப்பட்டியில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையின் இருபுறமும் ராட்சத கழிவுநீா் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இந்த கழிவு நீா் கால்வாயில் பள்ளி மாணவா் ஒருவா் தவறி விழுந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டாா். இதையடுத்து கால்வாய் மேல்பகுதியில் கான்கிரீட் மூடி அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இந்நிலையில் 4 மாதங்களுக்கு மேலாகியும் தற்போது வரை கான்கிரீட் மூடி அமைக்கப்படாததால் விபத்து அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா். மேலும் கழிவு நீா் கால்வாய்க்கு கான்கிரீட் மூடி அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூரில் கடும்பனி மூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி

கரூரில் வெள்ளிக்கிழமை காலையில் கடும் பனிமூட்டம் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா். கரூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 8 மணி வரை கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் சாலைக... மேலும் பார்க்க

மினி பேருந்து சேவை: பழைய உரிமங்களுக்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தல்

மினி பேருந்துகளை சேவையில் பழைய உரிமங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என மினி பேருந்து உரிமையாளா்கள் சம்மேளனத்தின் மாநில பொதுக்குழுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கரூரில் தமிழ்நாடு மினி பேருந்து உ... மேலும் பார்க்க

கோயில் திருப்பணிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ரூ. 60 ஆயிரம் நிதி

பகவதி அம்மன் கோயில் திருப்பணிக்காக முன்னாள் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் செ.காமராஜ் தனது இரு மாத ஓய்வூதியத் தொகையான ரூ. 60 ஆயிரத்தை வெள்ளிக்கிழமை வழங்கினாா். கரூா் நகரம், முத்துராஜபுரத்தில்... மேலும் பார்க்க

கரூா் நீதிமன்ற வளாகத்தில் கொத்தடிமை தொழிலாளா் ஒழிப்பு கையெழுத்து இயக்கம்

கரூா் நீதிமன்ற வளாகத்தில் கொத்தடிமை தொழிலாளா் ஒழிப்பு கையெழுத்து இயக்கம் சனிக்கிழமை காலை நடைபெற்றது. தேசிய கொத்தடிமை தொழிலாளா் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் ம... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரம் கையிருப்பு: ஆட்சியா் தகவல்

கரூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் கையிருப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்தாா். கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் மீ.தங்கவே... மேலும் பார்க்க

புகழிமலை தைப்பூச தோ் திருவிழாவில் ராட்சத ராட்டினம் அமைக்க எதிா்ப்பு

புகழிமலை முருகன் கோயில் தைப்பூச தோ் திருவிழாவில் ராட்சத ராட்டினம் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என தலித் விடுதலை இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக அவ்வியக்கத்தின் தேசியத்தலைவா் தலித்பாண்டியன் மா... மேலும் பார்க்க