செய்திகள் :

சாலை உள்கட்டமைப்பு வசதி திட்டங்கள்: முதல்வருடன் அமைச்சா் நிதின் கட்கரி ஆலோசனை

post image

தேசிய தலைநகா் தில்லியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்எச்ஏஐ) மூலம் நடந்து வரும் திட்டங்களின் முன்னேற்றம் மறுஆய்வு செய்வதற்காக முதல்வா் ரேகா குப்தாவுடன் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இச்சந்திப்புக்கு பிறகு முதல்வா் ரேகா குப்தா கூறியதாவது:

பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள் மூலம் தில்லியின் நெரிசலைக் குறைத்து மாசு இல்லாத நகரமாக மாற்ற மத்திய அரசு பெருமளவில் உதவுகிறது.

ரூ.24,000 கோடி மதிப்பிலான திட்டங்களின் விரிவான திட்ட அறிக்கைகள் (டிபிஆா்) தயாரிக்கப்பட்டுள்ளன.

சராய் காலே கானில் இருந்து இந்திரா காந்தி சா்வதேச (ஐஜிஐ) விமான நிலையம் வரையிலான சுரங்கப்பாதைக்கான சாத்தியக்கூறுகளும் மதிப்பிடப்பட்டு வருகின்றன.

மத்தியிலும், தில்லியிலும் அமைந்துள்ள பாஜக தலைமையிலான இரட்டை இயந்திர அரசாங்கம் தில்லி மக்களுக்கு பயனளித்து வருகிறது.

தில்லியில் ரூ.35,000 கோடி மதிப்பில் என்எச்ஏஐ

திட்டங்கள் நடந்து வருகின்றன. ரூ.64 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் முடிக்கப்பட்டிருக்கின்றன.

ஃபரீதாபாத் மற்றும் குருகிராமுடன் இணைக்கப்படும் சாலை, தில்லி-கட்ரா-அமிா்தசரஸ் நெடுஞ்சாலை உள்பட பல்வேறு சாலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை ,ஹரியாணா மற்றும் நொய்டாவிலிருந்து தில்லிக்குள் நுழையாமல் டேராடூனை சென்றடைவதற்கு வாகனங்களை அனுமதிக்கும்.

அதேபோன்று, தில்லி - ரோத்தக் சாலை, பஞ்சாபி பாக் முதல் நாங்லோய் வரையிலான சாலை,

ஆஸ்ரம-பதா்பூா் சாலை மற்றும் எம்.ஜி. சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளின் மேம்பாட்டையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கையகப்படுத்தியுள்ளது,

இந்த சாலைகளில் வடிகால் அமைப்பு மற்றும் அணுகுச் சாலைகளையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உருவாக்கும்.

ஷிவ் மூா்த்தி முதல் நெல்சன் மண்டேலா சாலை வரை 7 கிலோமீட்டா் தூரத்துக்கு தரைக்கடியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஐஎன்ஏ முதல் இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம் வரை மேம்பாலச் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்எச்ஏஐ) அதன் சாலைகளைச் சுற்றி வடிகால் அமைப்பைக் கட்டும் பணியையும் எடுத்துக்கொண்டுள்ளது.

இது பல நிறுவனங்களால் ஏற்படும் சிக்கல்களை நீக்கும். பொதுப் பணித் துறை அவற்றுக்கு உதவும்.

தில்லிக்கு ரூ.150 கோடி மதிப்புள்ள சாலை மேம்பாலம் மற்றும் சாலை கீழ்ப்பாலம் அமைக்கும் திட்டங்களுக்கும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

தில்லிக்கு ரூ.1.25 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்காக, நான் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்தாா் முதல்வா் ரேகா குப்தா.

இக்கூட்டத்தில் துணைநிலை ஆளுநா் வி. கே. சக்சேனா, சாலைப் போக்குவரத்துத் துறை இணையமைச்சா் ஹா்ஷ் மல்ஹோத்ரா மற்றும் தில்லி அமைச்சா்கள் கலந்துகொண்டனா்.

பெண்ணிடம் ஆபாச வாா்த்தைகள் பேசிய விவகாரம்: தட்டிக்கேட்ட இளைஞா் மீது தாக்குதல்!

கிழக்கு தில்லியின் காந்தி நகரில், பெண்ணிடம் ஆபாசமாகப் பேசி துன்புறுத்தலில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட 18 வயது இளைஞா், இருவரால் தாக்கப்பட்ட சம்பவத்தை தில்லி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதுகுறித்து போ... மேலும் பார்க்க

ஜம்மு, தில்லி துணைநிலை ஆளுநா்களை விரைவில் மாற்ற மத்திய அரசு தீவிர பரிசீலனை!

ஜம்மு - காஷ்மீா் மற்றும் தில்லி துணைநிலை ஆளுநா்களை மாற்ற மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக பிரதமா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. தில்லியின் தற்போதைய துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனாவை ஜம்ம... மேலும் பார்க்க

ஐடிஓ பகுதியில் வருவாய் கட்டடத்தில் தீ விபத்து

தில்லி ஐ.டி.ஓ. பகுதியில் உள்ள வருவாய் கட்டடத்தில் உள்ள ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது: வருவாய் கட்... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம்!

பிரேசிலில் நடைபெற்ற 11ஆவது பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றக் கூட்டத்தில் ஜம்மு -கஷ்மீா், பஹல்காமில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்... மேலும் பார்க்க

வெப்பம் அதிகரிப்பால் தினமும் 100 அழைப்புகள் பெறும் தீயணைப்புத் துறை!

தேசிய தலைநகரில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், தில்லி தீயணைப்புத் துறைக்கு வரும் அவசர அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரும்பாலான தீ தொடா்பான சம்பவங்கள் அடா்த்தியான மக்கள்தொகை கொண்ட பகுதி... மேலும் பார்க்க

வட்டி விகிதக் குறைப்பால் பங்குச்சந்தையில் எழுச்சி!

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்... மேலும் பார்க்க