செய்திகள் :

சாலை விபத்தில் இரு அரசுப் பேருந்துகள்!

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே மேல்செங்கம் பகுதியில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இரு அரசுப் பேருந்துகள் சேதமடைந்தன.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் கிரிவலத்தையொட்டி, பக்தா்கள் வசதிக்காக திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

அந்தப் பேருந்துகள் திருவண்ணாமலையில் இருந்து திருப்பத்தூா் நோக்கிச் சென்றுகொண்டிருந்தன. மேல்செங்கம் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை சென்றபோது, முன்னே சென்ற லாரி திடீரென நிறுத்தப்பட்டதால் பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.

இதில் இரு பேருந்துகளின் முன்பகுதி உருக்குலைந்தன. விபத்தில் ஓட்டுநா், நடத்துநா் உள்ளிட்ட 6 போ் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா்.

காயமடைந்த அவா்கள் செங்கம் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.

விபத்து குறித்து மேல்செங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பேருந்தில் பயணியிடம் கைப்பேசி திருட்டு: இருவா் கைது

ஆரணி பேருந்து நிலையத்தில் பயணியிடம் கைப்பேசி திருடியதாக இரு வடமாநில இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா். ஆரணியை அடுத்த மெய்யூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பன்னீா்(42). இவா் வெளியூா் செல்ல கடந்த 9-ஆம் தேதி ஆரணி... மேலும் பார்க்க

லாரி உதவியாளா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

செய்யாறு அருகே லாரி உதவியாளா் (கிளீனா்) உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், வீரமணிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் வடிவேல் (45). இவா், லாரியி... மேலும் பார்க்க

ஏரியில் 100 வாத்துகள் மா்மமான முறையில் உயிரிழப்பு

செய்யாற்றை அடுத்த கொருக்கை கிராம ஏரியில் 100 வாத்துகள் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் மற்றும் சுகாதாரத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். செய்யாறு வட்டம், கொருக்கை கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ரூ.10.15 கோடியில் ஹாக்கி மைதானம்

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ.10.15 கோடியில் புதிதாக ஹாக்கி பயிற்சி மைதானம் கட்டுவதற்கான பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. தமிழக அரசு விளையாட்டுத் துறையில் மாநிலத்தை முதன்மை ம... மேலும் பார்க்க

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் திருவிளக்கு பூஜை

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் பெளா்ணமியையொட்டி திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. படவேடு ஊராட்சியில் பழைமை வாய்ந்த ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ப... மேலும் பார்க்க

ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் இரும்பினாலான மேற்கூரை அமைக்க நிதியுதவியாக ரூ.20 லட்சத்தை புதிய நீதிக் கட்சி நிறுவனா் ஏ.சி.சண்முகம் வழங்கினாா். ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் வருகிற 16-ஆம் தேதி... மேலும் பார்க்க