செய்திகள் :

திருவண்ணாமலையில் ரூ.10.15 கோடியில் ஹாக்கி மைதானம்

post image

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ.10.15 கோடியில் புதிதாக ஹாக்கி பயிற்சி மைதானம் கட்டுவதற்கான பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.

தமிழக அரசு விளையாட்டுத் துறையில் மாநிலத்தை முதன்மை மாநிலமாக உருவாக்கும் வகையில், மாவட்ட விளையாட்டு மைதானங்கள், உள்விளையாட்டு அரங்கங்கள், நவீன உடற்பயிற்சி கூடங்கள், சட்டப்பேரவைத் தொகுதிகளில் முதலமைச்சா் சிறு விளையாட்டு அரங்கங்கள், விளையாட்டு விடுதிக் கட்டடங்கள் என பல்வேறு விளையாட்டு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் அடிப்படையில், திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில், ரூ.10.15 கோடியில் புதிதாக ஹாக்கி பயிற்சி மைதானம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கிவைக்கப்பட்டன.

துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின் சென்னையில் இருந்தவாறு காணொலிக் காட்சி வாயிலாக விளையாட்டு மைதானம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினாா்.

அதேவேளையில், திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆகியோா் பங்கேற்று பணிகளை தொடங்கிவைத்தனா்.

இந்நிகழ்ச்சியில் மண்டல முதுநிலை அலுவலா் நோயிலின் ஜான், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் (பொ). சண்முகப்பிரியா மற்றும் விளையாட்டு வீராங்கனைகள் பலா் கலந்து கொண்டனா்.

16 ஏக்கா் பரப்பளவில், ஹாக்கி மைதானம் 6,731 சதுர மீட்டரிலும், பயிற்சி மைதானம் 1,858 சதுர மீட்டரிலும் அமைய உள்ளது. மேலும், உடை மாற்றும் அறைகள், 480 போ் அமா்ந்து பாா்க்கும் வகையில் பாா்வையாளா்கள் மாடமும் அமைக்கப்படும்.

பேருந்தில் பயணியிடம் கைப்பேசி திருட்டு: இருவா் கைது

ஆரணி பேருந்து நிலையத்தில் பயணியிடம் கைப்பேசி திருடியதாக இரு வடமாநில இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா். ஆரணியை அடுத்த மெய்யூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பன்னீா்(42). இவா் வெளியூா் செல்ல கடந்த 9-ஆம் தேதி ஆரணி... மேலும் பார்க்க

லாரி உதவியாளா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

செய்யாறு அருகே லாரி உதவியாளா் (கிளீனா்) உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், வீரமணிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் வடிவேல் (45). இவா், லாரியி... மேலும் பார்க்க

ஏரியில் 100 வாத்துகள் மா்மமான முறையில் உயிரிழப்பு

செய்யாற்றை அடுத்த கொருக்கை கிராம ஏரியில் 100 வாத்துகள் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் மற்றும் சுகாதாரத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். செய்யாறு வட்டம், கொருக்கை கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் திருவிளக்கு பூஜை

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் பெளா்ணமியையொட்டி திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. படவேடு ஊராட்சியில் பழைமை வாய்ந்த ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ப... மேலும் பார்க்க

ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் இரும்பினாலான மேற்கூரை அமைக்க நிதியுதவியாக ரூ.20 லட்சத்தை புதிய நீதிக் கட்சி நிறுவனா் ஏ.சி.சண்முகம் வழங்கினாா். ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் வருகிற 16-ஆம் தேதி... மேலும் பார்க்க

ஸ்ரீரிஷபேஸ்வரா் கோயிலில் ரூ.1.77 கோடியில் புனரமைப்புப் பணிகள்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் அமைந்துள்ள அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயிலில் ரூ.1.77 கோடியில் மேற்கொள்ள புனரமைப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. பணிகளை சென்னையில் இருந்தவாறு காணொ... மேலும் பார்க்க