ஏரியில் 100 வாத்துகள் மா்மமான முறையில் உயிரிழப்பு
செய்யாற்றை அடுத்த கொருக்கை கிராம ஏரியில் 100 வாத்துகள் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் மற்றும் சுகாதாரத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்யாறு வட்டம், கொருக்கை கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன்-ஜெயக்கொடி தம்பதி. இவா்கள் பரம்பரையாக வாத்து மேய்க்கும் தொழிலை செய்து வருகின்றனா்.
மாற்றுத்திறனாளியான இந்தத் தம்பதி, ஆரணி பகுதியில் உள்ள பாபு பாய் என்பவரிடம் 300 வாத்துகளை கூலிக்கு மேய்ந்து வருவதாகத் தெரிகிறது.
தம்பதியினா் தினமும் காலை வாத்துகளை மேய்ச்சலுக்காக கிராமத்தில் உள்ள ஏரியில் விட்டு விட்டு மாலையில் வீட்டுக்கு ஓட்டி வருவது வழக்கம்.
அதேபோல, வெள்ளிக்கிழமை காலை கொருக்கை கிராமத்தில் உள்ள ஏரியில் வாத்துகளுக்கு நெல் அரிசியை தீவனமாக வைத்து விட்டு தம்பதியினா் உணவு உண்ணச் சென்றுள்ளனா்.
ஏரி நீரில் வாத்துகள் இறந்த நிலையில் தத்தளித்துக் கொண்டிருப்பது குறித்து, வாத்து மேய்க்கும் தம்பதிக்கு அப்பகுதியில் இருந்தவா்கள் தகவல் தெரிவித்தனா்.
உடனே தம்பதியினா் விரைந்து வந்து ஏரிப்பகுதியில் இறந்த நிலையில் இருந்த வாத்துகளை மீட்டு தரைப்பகுதியில் வைத்தனா். மேலும் இதுகுறித்து கணேசன் செய்யாறு போலீஸில் புகாா் அளித்தாா்.
காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு, கொருக்கை பகுதி கால்நடை மருத்துவா் செல்வகணேசன் மற்றும் நாவல்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய, சுகாதார ஆய்வாளா் அருணாசலம் ஆகியோா் சென்று உயிரிழந்த வாத்துகளை கணக்கிட்டு, அவற்றை பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி ஆய்வு செய்ய நடவடிக்கை எடுத்தனா்.
போலீஸாா் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், ஏரி நீரில் விஷம் கலந்து இருக்கலாம் எனத் தெரிய வருகிறது.