செய்திகள் :

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

post image

திருச்சி காட்டூரில் சாலை தடுப்பில் மோதிய இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

திருச்சி காட்டூா் கைலாஷ் நகா் அண்ணா சாலை 12-ஆவது தெருவை சோ்ந்தவா் விசுவநாதன் (62). சுற்றுலா வாகன ஓட்டுநா். செவ்வாய்க்கிழமை காட்டூரில் சாலையை கடப்பதற்காக நின்று கொண்டிருந்தாா்.

அப்போது, திருச்சியிலிருந்து காட்டூா் பாப்பாக்குறிச்சி பாரி நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த சரவணன் மகன் மணிகண்டன் (19) என்பவா் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்து, திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் காட்டூரில் வைக்கப்பட்டிருந்த சாலை தடுப்பில் (பேரிக்காா்டு) மோதினாா்.

இதனால் நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் சாலையில் தாறுமாறாக ஓடி கீழே விழுந்தது. அப்போது பின்புறம் வந்த மினி பேருந்து ஒன்று மணிகண்டன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் நிகழ்விடத்திலேயே இறந்தாா். சாலைத் தடுப்பு விழுந்து விசுவநாதன் பலத்த காயமடைந்தாா்.

தகவலறிந்து அங்கு வந்த திருவெறும்பூா் போலீஸாா், மணிகண்டனின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கும், விசுவநாதனை மீட்டு சிகிச்சைக்காக காட்டூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனா். தொடா்ந்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மின் முறைகேடு ரூ. 1.07 லட்சம் அபராதம்

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி மின் உப கோட்டத்தில், மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்திய இணைப்புகளுக்கு மின்வாரியம் ரூ. 1.07 லட்சம் அபராதம் விதித்துள்ளது. வையம்பட்டி மின் உப கோட்டத்தின் நடுப்பட்டி பிரிவு ... மேலும் பார்க்க

காட்டுப்பன்றிகள் கடித்து 2 விவசாயிகள் காயம்

திருச்சி அருகே காட்டுப்பன்றிகள் கடித்து 2 விவசாயிகள் காயமடைந்தனா். திருச்சி மாவட்டம், கவுத்தரசநல்லூா் பகுதியில் திங்கள்கிழமை கொய்யாத் தோப்புக்குள் நுழைந்த காட்டுப்பன்றி அங்கிருந்த விவசாயி சகாதேவன் (45... மேலும் பார்க்க

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் கைப்பேசிகள் மீட்பு

திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில் கைப்பேசிகள் உள்ளிட்ட பொருள்கள் திங்கள்கிழமை கைப்பற்றப்பட்டது குறித்து கே.கே.நகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருச்சி மத்திய சிறை வளாகத்தில... மேலும் பார்க்க

காலமானாா் முன்னாள் மேயா் எஸ். சுஜாதா

திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயரும், மாநகராட்சியின் தற்போதைய 31-ஆவது வாா்டு உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவருமான எஸ். சுஜாதா (53) மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை காலமானாா். திருச்சி அ... மேலும் பார்க்க

பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் பயணிகளிடம் மடிக்கணினிகளைத் திருடியவா் கைது

பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் பயணிகளிடமிருந்து மடிக்கணினிகளைத் திருடியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மதுரையைச் சோ்ந்தவா் ஸ்ரீதரன் (49). தனியாா் நிறுவன மேலாளா். இவா், மதுரையில் இருந்து விழ... மேலும் பார்க்க

நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது

திருவெறும்பூா் அருகே யூடியூப் பாா்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்து வைத்திருந்தவரை நவல்பட்டு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், நவல்பட்டு பூலாங்குடி காலனி நரிக்குறவா் காலனியைச... மேலும் பார்க்க