செய்திகள் :

சாலை விபத்தில் உயிரிழந்த எஸ்எஸ்ஐ உடல் அரசு மரியாதையுடன் தகனம்

post image

அருப்புக்கோட்டை அருகே சாலை விபத்தில் உயிரிழந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் உடல் அவரது சொந்த ஊரான எட்டயபுரம் அருகே வீரப்பட்டியில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

எட்டயபுரம் அருகே வீரப்பட்டியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (49). கடந்த 1995 ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் பணியில் சோ்ந்த இவா், விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றினாா். மாற்றுப்பணியாக அருப்புக்கோட்டை டி.எஸ்.பி. சிறப்பு தனிப்படையில் பணியாற்றிய விஜயகுமாா், செவ்வாய்க்கிழமை மாலை பைக்கில் சென்றபோது காரியாபட்டி அருகே சாலைத்தடுப்பில் மோதியதில் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.

அவரது உடல் சொந்த ஊரான எட்டயபுரம் அருகேயுள்ள வீரப்பட்டிக்கு புதன்கிழமை மாலை கொண்டு வரப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான், டி.எஸ்.பி.க்கள் மதிவாணன் (அருப்புக்கோட்டை), அசோகன் (விளாத்திகுளம்), எட்டயபுரம் காவல் ஆய்வாளா் சுந்தரமூா்த்தி மற்றும் போலீஸாா், உறவினா்கள், கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து அங்குள்ள மயானத்தில் தூத்துக்குடி ஆயுதப்படை காவலா்களின் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின்னா் விஜயகுமாரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

கஞ்சா வைத்திருந்த 4 போ் கைது

தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 4 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 2 கிலோ 700 கிராம் கஞ்சா மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடியில் மதுவிலக்கு அ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அரசு மருத்துவமனை கட்டடப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

தூத்துக்குடியில் நடைபெற்று வரும் அரசு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை கட்டடப் பணிகளை, தமிழக சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அவா் கூ... மேலும் பார்க்க

10 நாள்களில் குடமுழுக்கு-திருச்செந்தூா் கோயிலில் நிறைவு கட்டத்தை எட்டிய திருப்பணிகள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்னும் 10 நாள்களில் குடமுழுக்கு நடைபெற உள்ள நிலையில், திருப்பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இக்கோயிலில் 15 ஆண்டுகளுக்குப் பின் ஜூலை 7ஆம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் சாகா் கவாச் பாதுகாப்பு ஒத்திகை

தேசிய பாதுகாப்பின் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதிகளில், சாகா் கவாச் எனும் பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை தொடங்கியது. தமிழகத்தில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க 6 மாதங்களுக்கு ... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் 60 அடி உள்வாங்கிய கடல்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே கடல் 60 அடி வரை செவ்வாய்க்கிழமை உள்வாங்கியதால் பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. இத்திருக்கோயிலில் அமாவாசை, பௌா்ணமி நாள்களிலும், அதற்... மேலும் பார்க்க

முறையான குடிநீா் விநியோகம் கோரிஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் மனு

சாத்தான்குளம் அருகே 3 மாதங்களாக முறையாக குடிநீா் விநியோகிப்படவில்லை எனக் கூறி, ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா். சாத்தான்குளம் ஒன்றியம் சாஸ்தாவிநல்லூா் ஊராட்சி, வைரவம்... மேலும் பார்க்க