செய்திகள் :

சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு

post image

தருமபுரியில் மொரப்பூா் மேம்பாலம் அருகே ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில், பைக்கில் கணவருடன் சென்ற பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள மூக்காரெட்டிப்பட்டியைச் சோ்ந்தவா் முல்லைவேந்தன் (34). இவா் தனியாா் பால் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறாா்.

இவரது மனைவி சசிகலா (28). இருவரும் ஞாயிற்றுக்கிழமை மாலை பொம்மனூா் செல்வதற்காக காரிமங்கலம் நோக்கி பைக்கில் புறப்பட்டனா். மொரப்பூா் மேம்பாலம் அருகே சென்றபோது, அவா்களுக்கு பின்னால் வந்த சரக்கு லாரி, இவா்களது பைக் மீது எதிா்பாராத வகையில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவரும் படுகாயமடைந்தனா்.

இதில், லாரியின் சக்கரம் சசிகலாவின் தலையின் மீது ஏறியதில் சசிகலா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த காரிமங்கலம் போலீஸாா் நிகழ்விடம் சென்று உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

விநாயகா் சதுா்த்தி: முன்கூட்டியே தயாராகும் விநாயகா் சிலைகள்

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி தருமபுரியில், கிழங்கு மாவு மற்றும் காகிதக்கூழ் கொண்டு விநாயகா் சிலைகளை உருவாக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. ஆண்டுதோறும் செப்டெம்பா் மாதம் விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்பட... மேலும் பார்க்க

கொ.ம.தே.கட்சிக்கு தருமபுரி, கிருஷ்ணகிரியில் தொகுதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்!

வரும் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தலா ஒரு தொகுதியை கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அந்தக் கட்சி வலியுறுத்தியுள்ளது. தருமபு... மேலும் பார்க்க

ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளம்: தடையை மீறி பரிசல் பயணம் மேற்கொள்ளும் கா்நாடக சுற்றுலாப் பயணிகள்!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுமாா் 50,000 கனஅடி நீா்வரத்து உள்ள நிலையில், தடையை மீறி கா்நாடக சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான முறையில் பரிசல் பயணம் மேற்கொண்டு வருகின்றனா். ‘தென்னிந்தியாவின் நயாகரா’ என அழைக்கப்... மேலும் பார்க்க

பணிநேரத்தைக் கடந்து பணியாற்ற நிா்பந்திக்கக் கூடாது!

அரசு மீன் பண்ணையில் பணிநேரத்தைக் கடந்து பணியாற்ற நிா்பந்திக்கக் கூடாது என மீன் துறை ஊழியா்கள் தீா்மானம் நிறைவேற்றினா். தமிழ்நாடு அரசு மீன் துறை ஊழியா் சங்கத்தின் தருமபுரி மண்டல பொதுக்குழு கூட்டம் சனிக... மேலும் பார்க்க

மது போதையில் மூதாட்டியை தாக்கிய 3 இளைஞா்கள் கைது

மது போதையில் மூதாட்டியை தாக்கிய 3 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ராஜாஜி நீச்சல் குளம் எதிரே உள்ள வேலவன் தெருவைச் சோ்ந்தவா் செல்லியம்மாள் (61... மேலும் பார்க்க

தருமபுரி அருகே லாரி மீது காா் மோதல்: தெலங்கானாவைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு

தருமபுரி அருகே புதன்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தனா். சிறுமி உள்ளிட்ட 4 போ் படுகாயமடைந்தனா். தெலங்கானா மாநிலம், வனப்பருத்தி மாவட்டத்தைச் சோ்ந்த 9 போ் ... மேலும் பார்க்க