செய்திகள் :

சாலை விபத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உறவினர் பலி!

post image

மேட்டுப்பாளையம் -குன்னூர் மலைப் பாதையில் நிகழ்ந்த சாலை விபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உறவினர் வியாழக்கிழமை உயிரிழந்தார். மேலும், அவருடன் பயணித்த இருவர் படுகாயமடைந்தனர்.

மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜா. இவரது மனைவி திவ்யபிரியா (28), பல் மருத்துவரான இவர், அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உறவினர்.

கார்த்திக் ராஜா, திவ்யபிரியா, உறவினர்கள் பரமேஸ்வரி (44), வளர்மதி (48) ஆகியோர் நீலகிரி மாவட்டம், உதகைக்கு காரில் கடந்த 20-ஆம் தேதி சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு தங்கி பல்வேறு இடங்களைக் கண்டுகளித்துவிட்டு உதகையில் இருந்து கார் மூலம் வியாழக்கிழமை மாலை மதுரை திரும்பினர். காரை மதுரையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் ஓட்டியுள்ளார்.

மேட்டுப்பாளையம் - குன்னூர் மலைப் பாதையில் கல்லாறு அருகே 1-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே வந்த போது, கார் திடீரென பிரேக் பிடிக்காமல் சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி நின்றது.

இதில், படுகாயமடைந்த திவ்யபிரியா, பரமேஸ்வரி, வளர்மதி ஆகியோரை அப்பகுதி மக்கள் உதவியுடன் கார்த்திக் ராஜா, ஓட்டுநர் பார்த்திபன் ஆகியோர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு திவ்யபிரியாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பரமேஸ்வரி, வளர்மதி ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இச்சம்பவம் குறித்து மேட்டுப் பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் பரவலாக மழை

சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று (மே 22) தெற்கு கொங்கன் கடலோரப்பகுதியை தாண்டியுள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று காலை (மே 23... மேலும் பார்க்க

பொறியியல் கலந்தாய்வு: 2.34 லட்சம் பேர் விண்ணப்பம்

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் (2025-2026) பொறியியல் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான கலந்தாய்வுக்கு 2.34 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில், வெள்ளிக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி கடந்த 17 நாள்களி... மேலும் பார்க்க

அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் திமுக பாடல்! கொந்தளித்த சிறுத்தைகள்!

புதுக்கோட்டையில் அண்ணல் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் துணை முதல்வர் உதயநிதியின் பாடல் ஒலிக்கப்பட்டதால், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அண்ணல் அம்பேத்கரின் சிலை திறப்ப... மேலும் பார்க்க

மதுபோதையில் ஷேர் ஆட்டோவை ஓட்டியதால் 3 பேர் பலி!

ராமநாதபுரத்தில் மதுபோதையில் ஷேர் ஆட்டோவை ஓட்டியதில் 3 பலியாகக் காரணமான ஓட்டுநருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது.ராமநாதபுரத்தில் செல்லபாண்டியன் என்பவர் ஷேர் ஆட்டோ ஓட்டி வந்தார். இந்த நிலையில்,... மேலும் பார்க்க

ஆழியார் அணையில் யானைக் கூட்டம்: சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை!

ஆழியார் அணையில் யானைக் கூட்டம் உலா வருவதால் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது ஆழியார் ... மேலும் பார்க்க

சேலம் ரயில் நிலையத்தில் உள்கூரை விழுந்தது! பயணிகள் தப்பினர்!

சேலம் சந்திப்பு ரயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தில் உள்கூரை (ஃபால்ஸ் சீலிங்) திடீரென விழுந்ததால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.இந்தியா முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் முக்கிய ரயி... மேலும் பார்க்க