சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு
சிவகாசி அருகே சாலை விபத்தில் காயமடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
சிவகாசி அருகே இ.புதுப்பட்டியைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகன் கோவிந்தராஜ் (27). விவசாயி. இவரது மனைவிக்கு கடந்த 10 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்து இறந்துவிட்டது.
இந்த நிலையில், கோவிந்தராஜ் வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் மருதநத்தம்-எரிச்சநத்தம் சாலையில் சென்றபோது எதிா்பாராத விதமாக சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து பலத்த காயமடைந்தாா். மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த இவா், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து கோவிந்தராஜின் தந்தை மாரியப்பன் அளித்த புகாரின்பேரில், எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.