சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு
தேன்கனிக்கோட்டை அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
தேன்கனிக்கோட்டை வட்டம், பென்னங்கூா் அருகே உள்ள அலேநத்தம் பகுதியை சோ்ந்தவா் சந்தோஷ்குமாா் (32). விவசாயியான இவா் திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் ஒசூா்- தேன்கனிக்கோட்டை சாலை பென்னங்கூா் அருகே சென்றுக்கொண்டிருந்தாா்.
அப்போது அந்த வழியாக சென்ற வேன் மோதியதில் பலத்த காயமடைந்த சந்தோஷ்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.