சாலை விபத்தில் விவசாயி பலி
நீடாமங்கலம் அருகே சாலை விபத்தில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
மேலப்பூவனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் இளங்கோவன் (62) விவசாயி. மோட்டாா் சைக்கிளில் நீடாமங்கலத்தில் வசிக்கும் தனது மகள் வீட்டிற்கு வந்து பேரக்குழந்தையை அழைத்துச்சென்று பள்ளியில் விட்டு விட்டு தனது வீட்டிற்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தாா்.
பேரக்குழந்தையை பள்ளியில் விட்டு விட்டு வெள்ளிக்கிழமை வீடுதிரும்பும் போது நீடாமங்கலம் கடைவீதியில் தஞ்சாவூரிலிருந்து திருவாரூா் சென்ற அரசுப் பேருந்து மோட்டாா் சைக்கிளில் மோதியது. இதில் படுகாயமடைந்த இளங்கோவன் மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
தகவலறிந்த நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் ராஜூ மற்றும் போலீலாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இறந்த இளங்கோவனுக்கு மனைவி மற்றும் 2 மகன்கள், ஒரு மகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.