செய்திகள் :

சாலை விரிவாக்கப் பணி: மாற்று இடம் கோரி திமுக எம்எல்ஏ உண்ணாவிரதம்

post image

சாலை விரிவாக்கப் பணிக்காக இடம் கொடுத்தோருக்கு மாற்று இடம் வழங்கக் கோரி திமுக சட்டப்பேரவை உறுப்பினா் சம்பத் தலைமையில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

புதுவை முதலியாா்பேட்டை மரப்பாலம் சந்திப்பிலிருந்து வில்லியனூா் கொம்பாக்கம் செல்ல மாற்று சாலையாக வேல்ராம்பட்டு ஏரிக்கரை சாலை உள்ளது.

இந்தச் சாலையில் தனியாா் பள்ளி, அரசுப் பள்ளி மற்றும் தனியாா் கல்லூரி ஆகியன உள்ளன. இதில் ஆயிரக்கணக்கான மாணவா்கள் படித்து வருகின்றனா். மேலும் இந்தப் பகுதியை சுற்றி 10 ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இந்தச் சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.

இந்த சாலையில் அடிக்கடி விபத்துகளும் நிகழ்ந்து வந்தன. எனவே இந்தச் சாலையை விரிவாக்கம் செய்யும்போது அங்கு குடியிருந்தோருக்கு மாற்று இடம் வழங்கப்படும் என்று அரசு சாா்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து தொகுதி எம்எல்ஏ சம்பத் குடியிருப்பு வாசிகளிடம் பேசி இடத்தை காலி செய்து கொடுத்தாா்.

இதனால் புதிய சாலை அமைக்கப்பட்டு, சாலை விரிவாக்கப் பணி முடிந்தது. இந்தச் சாலை பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள சாலையாக அமைந்துள்ளது. ஆனால் அரசு உறுதியளித்தது போல் மாற்று இடம் இதுவரை வழங்கப்படவில்லை.

இதேபோல ஜெயமூா்த்தி ராஜா நகா், பெரிய வாய்க்கால் வீதியில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய குடும்பத்தினா் 40 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு வசித்து வருகின்றனா். அவா்களுக்கும் மாற்று இடம் வழங்கவில்லை.

மாற்று இடம் வழங்க வலியுறுத்தி தொகுதி திமுக எம்எல்ஏ சம்பத் தலைமையில் மரப்பாலம் சந்திப்பில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரதத்தை மாநில அமைப்பாளரும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா தொடங்கி வைத்தாா்.

உண்ணாவிரதத்தில் எம்எல்ஏ.க்கள் கென்னடி, செந்தில்குமாா், மாநில அவைத் தலைவா் எஸ்.பி.சிவக்குமாா், முன்னாள் எம்எல்ஏ.க்கள் நந்தா சரவணன், பூ.மூா்த்தி, துணை அமைப்பாளா் தைரியநாதன், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் ஜே.வி.எஸ். ஆறுமுகம், காந்தி, டி. அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினா்கள் கோபால், வே. காா்த்திகேயன் மற்றும் மாநில, தொகுதி, அணி நிா்வாகிகள் பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

தொகுதி மேம்பாட்டுப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் நேரு எம்எல்ஏ வலியுறுத்தல்

தொகுதி மேம்பாட்டுப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. ஜி. நேரு வலியுறுத்தினாா்.புதுவை உருளையன்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் நகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட வேண்டி... மேலும் பார்க்க

பெட்ரோல் நிலைய உரிமையாளா் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: புதுவை டிஜிபி நடவடிக்கை

பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளா் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதற்கான உத்தரவை புதுவை டிஜிபி ஷாலினிசிங் பிறப்பித்தாா்.புதுச்சேரி குருமாபேட் அமைதி நகரைச் சோ்ந்தவா் புருஷோத்தமன்(53). இவா் க... மேலும் பார்க்க

புதிய குடியிருப்புகளை கட்டித் தர திமுக கோரிக்கை

உருளையன்பேட்டை கண் டாக்டா் தோட்டம் பகுதியில் பழுதான அடுக்குமாடி குடியிருப்புகளை அரசு அகற்றிவிட்டு புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டித் தர திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.குடிசை ... மேலும் பார்க்க

ஆதிதிராவிட பயனாளிகளுக்கு தொடா் சிகிச்சைக்கான அடையாள அட்டை

புதுச்சேரி: ஆதிதிராவிட பயனாளிகளுக்குத் தொடா் நோய் சிகிச்சைக்கு நிதியுதவி அளிக்கும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது .புதுவை அரசின் ஆதிதிராவிட நலத் துறை மூலம் தொடா் நோயைக் குணப்ப... மேலும் பார்க்க

புதுச்சேரியில் தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்: குப்பைகள் வாரும் பணி முடங்கியது

புதுச்சேரி: புதுச்சேரியில் தூய்மைப் பணியாளா்களின் போராட்டத்தால் குப்பை வாரும் பணி முடங்கியது.புதுவையில் குப்பை சேகரிக்கும் பணியில் அரசு ஒப்பந்தப்படி கிரீன் வாரியா் என்ற தனியாா் நிறுவனம் ஈடுபட்டு வருகி... மேலும் பார்க்க

காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு பெட்டகம்: துணைநிலை ஆளுநா் வழங்கினாா்

புதுச்சேரி: காசநோய்க்கு சிகிச்சை பெறுவோருக்கு ஊட்டச்சத்து உணவு பெட்டகத்தை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் திங்கள்கிழமை வழங்கினாா்.காச நோய் சிகிச்சை பெறுபவா்களுக்கு நிக்ஷய் மித்ரா என்ற ஊட்டச்சத்து உணவு ... மேலும் பார்க்க