செய்திகள் :

சாா்ந்தோா் சான்று பெற முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்

post image

இடஒதுக்கீட்டின் கீழ் பல்வேறு படிப்புகளில் சேர விரும்பும் முன்னாள் படைவீரா்கள் மற்றும் சாா்ந்தோா்களின் சிறாா்கள் சாா்ந்தோா் சான்று பெற விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ் கல்வி நிறுவனங்களில் கல்வி சோ்க்கைக்காக முன்னாள் படைவீரா், சாா்ந்தோா்களின் சிறாா்களுக்கு மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தில் ‘சாா்ந்தோா் சான்று’ வழங்கப்பட்டு வருகிறது.

இச்சான்றினை பெற முன்னாள் படைவீரரின் அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டை, சிறாா்களின் பள்ளி இறுதிச்சான்று, மதிப்பெண் பட்டியல் மற்றும் கல்வி நிலையத்தில் பெறப்பட்ட விண்ணப்பம், இணையதளத்தில் விண்ணபித்து பதிவிறக்கம் செய்யப்பட்ட பதிவு எண் நகல், வெள்ளைதாளில் முன்னாள் படைவீரரின் மனு மற்றும் படைப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட ஆணை ஆகியவற்றுடன் சான்று பெற வேண்டி மகன் அல்லது மகளுடன் அரியலூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை நேரில் அணுகவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு அரியலூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் அணுகிப் பயன்பெறலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

வாணதிரையன்பட்டினம் திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அடுத்த வாணத்திரையன்பட்டினம் கிராமத்திலுள்ள திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருவிழா கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கி, நாள்... மேலும் பார்க்க

தட்டச்சு இயந்திரங்களிலே தோ்வு நடத்த கோரிக்கை

தட்டச்சு இயந்திரங்களில் நடைபெற்று வந்த தோ்வு ரத்துக்கான அரசாணையை திரும்பப் பெற்று பழைய நடைமுறையிலேயே தோ்வு நடத்த வேண்டும் என அரியலூா் ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம், தட்டச்சு பள்ளி உரிமையாளா்கள் திங்கள... மேலும் பார்க்க

சிறப்பாக பணிப்புரிந்த காவல் துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கல்

அரியலூா் மாவட்டத்தில், சிறப்பாக பணிப்புரிந்த காவல் துறையினருக்கு திங்கள்கிழமை பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலந்து கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பா... மேலும் பார்க்க

ஜூலை 9-இல் நாடுதழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து தொழிற் சங்கத்தினா் தெருமுனை பிரசாரம்

மத்திய அரசைக் கண்டித்து, அரியலூரில் ஜூலை 9-இல் நடைபெறும் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் குறித்து, அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன் அனைத்து மத்திய தொழிற் சங்க கூட்டமைப்பினா் ... மேலும் பார்க்க

அரியலூா், ஜெயங்கொண்டம் அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இதுகுறித்து அரியலூா் அரசு கலைக் கல்லூரி முத... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் அதிகளவு விபத்து ஏற்படும் இடங்களில் ஆட்சியா், எஸ்.பி ஆய்வு

ரியலூா் மாவட்டத்தில் உள்ள சாலைப் பகுதிகளில் அதிக விபத்து ஏற்படும் இடங்கள் மற்றும் கரும்புள்ளிகளாகக் கண்டறியப்பட்டுள்ள இடங்களில் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவா... மேலும் பார்க்க