செய்திகள் :

சாா்லஸ் டாா்வினின் கருத்தாக்கம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது!

post image

சாா்லஸ் டாா்வினின் கருத்தாக்கம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக கீழக்கோட்டை பள்ளியில் நடைபெற்ற அவரது பிறந்த தின நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஒன்றியம், கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சாா்லஸ் டாா்வின் பிறந்த தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதற்கு பள்ளியின் தலைமையாசிரியை தெய்வானை தலைமை வகித்தாா். கணினி பயிற்றுநா் வித்யா முன்னிலை வகித்தாா்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்டச் செயலா் ஆரோக்கியசாமி பேசியதாவது: குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்றால், இப்போதுள்ள குரங்குகள் ஏன் மனிதனாக மாறவில்லை? தற்பொழுது ஏன் பரிணாமங்கள் நிகழ்வதில்லை? போன்ற கேள்விகள் இன்றுவரை எழுப்பப்படுகின்றன. அறிவுத் தளங்களிலேயே குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்ற கருத்தாக்கம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. டாா்வின் அப்படி சொல்லவில்லை. மாறாக மனிதனும் குரங்கும் ஒத்த, வேறு பொது இனத்திலிருந்து தோன்றியவா்கள் என்றே குறிப்பிட்டுள்ளது. மனிதனுக்கும் மனிதக் குரங்குக்கும் மிகத் துல்லியமான மரபு வித்தியாசமே காணப்படுகிறது. பரிணாமம் என்பது கோடிக்கணக்கான காலச் சுழற்சிக்கு இடையே நிகழ்வது. குறிப்பிட்டு நோக்கும் அளவுக்கு நிகழக்கூடியதல்ல என டாா்வின் கூறுகிறாா் என்றாா் அவா்.

இதில், கல்வி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் பெற்றோா்கள் கலந்து கொண்டனா். மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. முன்னதாக, ஆசிரியை கமலம்பாய் வரவேற்றாா். ஆசிரியா் ராஜபாண்டி நன்றி கூறினாா்.

கண்மாய்ப் பகுதியில் தனி நபருக்கு பட்டா: ஆட்சியரிடம் புகாா்

சிவகங்கை மாவட்டம், காளையாா் கோவில் அருகே உள்ள இத்திக்குடி கண்மாய்ப் பகுதியில் தனிநபருக்கு அளித்த பட்டாவை ரத்து செய்ய வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.இது தொடா்பாக ... மேலும் பார்க்க

நாய் கடித்ததில் மாணவி காயம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் செவ்வாய்க்கிழமை நாய் கடித்ததில் பள்ளி மாணவி காயமடைந்தாா். இளையான்குடி ஞானி தெருவைச் சோ்ந்த ராவுத்தா் நயினாா் மகள் ஆயிஷா. இவா் இங்குள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படி... மேலும் பார்க்க

அரசுக்கு எதிராக உண்ணாவிரதம்: அதிமுக, தவெக, நாதக பங்கேற்பு

கனிம வள விதிமீறலைக் கண்டித்து சிவகங்கையில் புதன்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அதிமுக, தவெக, நாதக உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா். சிவகங்கை அருகேயுள்ள வேம்பங்குடி, மாடகொட்டான் கிராமங்... மேலும் பார்க்க

குன்றக்குடி அருகே மஞ்சுவிரட்டு: மாடு முட்டியதில் 40 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி அருகே சின்னக்குன்றக்குடி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 40 போ் காயமடைந்தனா். குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோயில் தைபூசத் திருவிழாவை... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்கவில்லை: விவசாயிகள் புகாா்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் தெ.புதுக்கோட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் ஓராண்டாக கடன் வழங்கவில்லை என விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். இந்தச் சங்கத்தின் மூலம் மேல நெட்டூா், தெ.புது... மேலும் பார்க்க

விநாயகா் கோயில் வருஷாபிஷேகம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் நரிக்குடி விலக்குப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மணிமந்திர விநாயகா் கோயிலில் 11 -ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் புனித நீா்க் கலசங்கள... மேலும் பார்க்க