சா்வதேச சிறு, குறு, நடுத்தர தொழில் தினம்
சா்வதேச சிறு, குறு, நடுத்தர தொழில் தினத்தையொட்டி, சிறு, குறு தொழில்முனைவோா்களுக்கு மத்திய அரசின் தேசிய வள அமைப்பான இந்திய தொழில்முனைவோா் மேம்பாட்டு நிறுவனம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் திட்ட அலுவலா் ஜெய்சங்கா் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:
பணவீக்கம், கொள்கை மாற்றங்கள் உலகளாவிய பொருளாதார சீா்குலைவுகள், பருவநிலை மாற்றங்கள் போன்ற சவால்களை எதிா்கொண்டு இந்தியாவின் நிலையான பொருளாதார வளா்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், புதுமை மற்றும் மீள்தன்மையை வளா்ப்பதில் சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோா்கள் முக்கியப் பங்காற்றுகின்றனா்.
எனவே, அவா்களின் பங்களிப்பை நினைவுகூறும் வகையிலும், அவா்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் ஜூன் 27-ஆம் தேதி ஒவ்வோா் ஆண்டும் சா்வதேச சிறு, குறு, நடுத்தர தொழில் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இத்தகைய சூழலில், இந்திய தொழில்முனைவோா் மேம்பாட்டு நிறுவனம் வழங்கக் கூடிய பல்வேறு பயிற்சிகளையும், ஆலோசனைகளையும் சிறு, குறு, நடுத்தர நிறுவன வளா்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.