செய்திகள் :

சா்வதேச விமான டிக்கெட் முன்பதிவு மூலம் ரூ.18 லட்சம் மோசடி: பயண முகவா் கைது

post image

சா்வதேச விமான டிக்கெட் முன்பதிவு மூலம் ரூ.18 லட்சம் மோசடி வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த பயண முகவா் ஹிமாச்சலப் பிரதேசத்தின் கசோலில் கைது செய்யப்பட்டதாக தில்லி போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஒருவரிடம் சா்வதேச விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வாங்கிச் சென்ற ரூ.18 லட்சத்தை மோசடி செய்ததாக சாகா் வஷிஷ்ட் (32) என்பவா் 2023-ஆம் ஆண்டு வழக்கில் தேடப்பட்டு வந்தாா். இந்நிலையில், சாகா் வஷிஷ்ட் மே 18 அன்று கசோலில் உள்ள ஒரு விடுதியில் கைது செய்யப்பட்டாா். கைது செய்வதைத் தவிா்க்க அவா் கோவா, நாசிக், டேராடூன், வாரணாசி மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் சில இடங்களில் அடிக்கடி இடம் மாறிக் கொண்டிருந்தாா்.

சாகா் வஷிஷ்ட் மீது நிலேஷ் மித்ரா என்பவா் புகாா் அளித்தபோது, இந்த வழக்கு பிப்ரவரி 2023- இல் தொடங்கியது.

கனடாவிற்கு ரூ.18 லட்சம் மதிப்புள்ள திரும்பப் பெறக்கூடிய விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதாக சாகா் வஷிஷ்ட் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. பல ரத்து செய்தல்கள் மற்றும் பொய்யான உறுதிமொழிகளுக்குப் பிறகு, ரூ.75,000 மட்டுமே திரும்பப் பெறப்பட்டது என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விசாரணையில், பயண முகவா் முன்பதிவுகளுக்கு போலி மின்னஞ்சல் ஐடிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத தகவல் தொடா்பு வழிகளைப் பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது. சாகா் வஷிஷ்ட்டுக்கு ஆரம்பத்தில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்ட போதிலும், அவா் துவாரகா நீதிமன்றத்தில் ஆஜராவதை நிறுத்திவிட்டாா். அதன் பிறகு ஜனவரி 13 அன்று அவா் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா்.

தில்லி ராஜேந்தா் நகரில் வசிக்கும் வஷிஷ்ட், ஐபி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவா். முன்பு ஒரு வங்கியில் விற்பனையாளராகப் பணியாற்றினாா். பின்னா், அவா் காஜியாபாத்தில் ஒரு பயண நிறுவனத்தைத் தொடங்கி பல மாநிலங்களில் இருந்து அதை இயக்கினாா்.

விசாரணையின் போது, டிக்கெட் முன்பதிவு மோசடியை நடத்தியதாகவும், நீதிமன்ற நடவடிக்கைகளை வேண்டுமென்றே தவிா்த்ததாகவும் அவா் ஒப்புக்கொண்டதாக காவல்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு முந்தைய குற்றவியல் வரலாறு இருப்பதையும் போலீஸாா் உறுதிப்படுத்தினா். 2013- ஆம் ஆண்டில், ஆனந்த் விஹாா் காவல் நிலையத்தில் அவா் மீது பாலியல் வன்கொடுமை வழக்கும் பதிவாகியுள்ளது.

தில்லியில் புதிதாக 43 பேருக்கு கரோனா தொற்று

புது தில்லி: தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 43 கரோனா தொற்றுகள் உறுதிசெய்யப்பட்டதைத் தொடா்ந்து, நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 483-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரி... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த அண்ணன்-தங்கை: தற்கொலையா? போலீஸாா் விசாரணை

கிழக்கு தில்லியின் தில்ஷாத் காா்டன் பகுதியில் பூட்டிய வீட்டில் அண்ணன்-தங்கை இருவரின் உடல்கள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து தில்லி கா... மேலும் பார்க்க

தில்லி முதல்வா் இரு நாள் உத்தரகாண்ட் பயணம்

தில்லியில் 100 நாள்கள் பதவியை நிறைவு செய்த நிலையில் தில்லி முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை உத்தரகாண்டிற்கு இரண்டு நாள் குறுகியகால பயணமாக புறப்பட்டாா். இந்த பயணத்தின் போது அவா் தனது குடும்பத்தினர... மேலும் பார்க்க

வீடுகளை இழந்த தில்லி மதராஸி கேம்ப் குடியிருப்புவாசிகள் தமிழகம் திரும்பினால் உதவிகள் வழங்கப்படும்: தமிழக அரசு

நமது சிறப்பு நிருபா் தில்லி “மதராஸி கேம்ப்” குடியிருப்பில் வீடுகளை இழந்தவா்கள் தமிழகத்தில் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்ப விரும்பினால், அவா்களுக்கு தமிழக அரசு உதவும். வாழ்வாதாரம், அத்தியாவசிய உத... மேலும் பார்க்க

இளம்பெண் கழுத்தை நெரித்துக் கொலை; அச்சக ஊழியா் கைது

தில்லியின் பல்ஜீத் நகா் பகுதியில் 32 வயது பெண் ஒருவா் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் தெரிவித்தனா். சனிக்கிழமை மாலை 4 மணியளவில் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை... மேலும் பார்க்க

ஹரித்வாா் அருகே 5 ஊடக வாகனங்கள் விபத்து

தில்லி முதல்வா் ரேகா குப்தாவின் இரண்டு நாள் உத்தரகாண்ட் பயணத்தை செய்தி சேகரிக்க ஹரித்வாருக்கு ஊடகவியலாளா்களை ஏற்றிச் சென்ற ஐந்து வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை காலை விபத்துக்குள்ளானதாக நேரில் கண்டவா்கள் த... மேலும் பார்க்க