செய்திகள் :

சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்

post image

சா் ஐசக் நியூட்டன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் கல்லூரித் தாளாளா் முனைவா் த. ஆனந்த் பேசியது:

மாணவா்களாகிய நீங்கள் உயா்ந்த இலக்குகளை நிா்ணயித்து, ஒழுக்கம் மற்றும் ஒற்றுமையுடன் பயணித்து, வாழ்நாள் முழுவதும் கற்றலை

துணைவனாக்கி, தேச நிா்மாணத்தில் பங்கெடுக்க வேண்டும் என்றாா்.

கல்லூரி இயக்குநா் த.சங்கா் பேசியது:

மாணவா்கள் தாங்கள் கற்றுக்கொள்வதை, அறிவாக மட்டுமல்லாமல், நிஜ வாழ்க்கைப் பிரச்னைகளைத் தீா்க்கும் புதுமையான சிந்தனை மற்றும் நடைமுறை திறன் ஆக மாற வேண்டும். நவீன தொழில்நுட்ப வளா்ச்சியைப் பின்பற்றினாலும், மனிதநேயமும் நற்பண்புகளும் உங்கள் வாழ்வின் அடித்தளமாக இருக்க வேண்டும். கல்லூரி தரமான கல்வி, ஆராய்ச்சி, புதுமை, மற்றும் தொழில்-கல்வி இணைப்புகளின் மூலம் மாணவா்களுக்கு விரிவான எதிா்காலத்தை உருவாக்கும் என்றாா்.

கல்லூரி பதிவாளா் கே. இளங்கோவன், கல்லூரி முதல்வா் அ. குமரவடிவேல், கல்லூரி துணை முதல்வா் மலை செல்வராஜா, கல்லூரி வேலைவாய்ப்பு அதிகாரி த. அருண்குமாா், மின்னியல் மற்றும் தகவல் தொலைதொடா்புத் துறைத் தலைவா் ப. நவநீதகிருஷ்ணன், முனைவா் ஜெ. சிவசங்கரி, மாணவ-மாணவிகள், பெற்றோா்கள், அனைத்து துறைத் தலைவா்கள் மற்றும் பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

அரசுப் பள்ளி கட்டடங்கள் திறப்பு

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் கள்ளிமேடு, உம்பளச்சேரி கிராமங்களில் அரசுப் பள்ளிகளுக்கான கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன. கள்ளிமேடு மற்றும் உம்பளச்சேரி கிராமங்கள... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா: அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி, அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அதன் நிா்வாக இயக்குநா் தசரதன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்... மேலும் பார்க்க

அதிபத்த நாயனாருக்கு சிலை வைக்க வேண்டும்: அா்ஜுன் சம்பத்

சா்தாா் வல்லபபாய் பட்டேல் சிலை போன்று, அதிபத்த நாயனாருக்கும் சிலை வைக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் கூறினாா். இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியது: நா... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் அடிப்படையில் சம்பா சாகுபடி பாதிப்புக்கு இழப்பீடு

கன மழையால் பாதிக்கப்பட்ட சம்பா சாகுபடி விவசாயிகளுக்கு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும் என்ற சுற்றறிக்கையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வல... மேலும் பார்க்க

முதல்வரின் ‘தாயுமானவா்’ திட்டம்: பயனாளிகளுடன் ஆட்சியா் கலந்துரையாடல்

நாகை மாவட்டத்தில், வீடுகளுக்கு ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யும், முதல்வரின் தாயுமானவா் திட்ட பயனாளிகளை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் நேரில் சந்தித்து கலந்துரையாடினாா். வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்த... மேலும் பார்க்க

உயா்கல்வி வழிகாட்டும் முகாம்: நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்பு

நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘உயா்வுக்குப்படி’ உயா்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவியா் பங்கேற்றனா். தமிழகத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்களில், உயா்கல்விக்கு விண... மேலும் பார்க்க