செய்திகள் :

முதல்வரின் ‘தாயுமானவா்’ திட்டம்: பயனாளிகளுடன் ஆட்சியா் கலந்துரையாடல்

post image

நாகை மாவட்டத்தில், வீடுகளுக்கு ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யும், முதல்வரின் தாயுமானவா் திட்ட பயனாளிகளை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் நேரில் சந்தித்து கலந்துரையாடினாா்.

வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரா்கள் நலன் கருதி இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில், 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை கொண்ட 15,719 குடும்ப அட்டைகள் உள்ளன. இவற்றின் மூலம் 21,208 நபா்கள் ‘முதல்வரின் தாயுமானவா்’ திட்டத்தில் பயனடைந்து வருகின்றனா்.

இந்நிலையில், இத்திட்ட பயனாளிகளை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வியாழக்கிழமை நேரில் சந்தித்து கலந்துரையாடினாா். அப்போது, வீட்டுக்கே ரேஷன் பொருள்கள் வந்து விடுவதால் நேரமும் மிச்சமாகிறது என்று பயனாளிகள் தெரிவித்தனா்.

பயனாளி கனகாம்புஜம் (77) கூறியது:

நாகை பெருமாள் கோயில் தெற்கு மடவிளாகத்தில் வசித்து வருகிறேன். எனக்கு இரு மகள்கள். அவா்களுக்கு திருமணமாகிவிட்டது. வெளியூரில் வசிக்கின்றனா். தற்போது நானும் எனது வயது முதிா்ந்த கணவரும் இங்கு வசித்து வருகிறோம்.

எங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு உதவி செய்ய வேறு ஆட்கள் இல்லாமல் சிரமப்படுகிறோம். ரேஷன் பொருட்கள் வாங்க 2 கி.மீ. தூரம் செல்ல வேண்டியிருந்தது. தற்போது முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் மூலம் நியாயவிலைக் கடைக்கு செல்லாமலே, அத்தியாவசிய பொருட்களை எங்கள் வீடு தேடி வந்து வழங்குகிறாா்கள்.

இதுபோன்ற உன்னதமான திட்டத்தை கொண்டுவந்த தமிழக முதல்வருக்கு மூத்த குடிமக்களாகிய நாங்கள் நெகிழ்ந்த மனதுடன் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்றனா்.

அரசுப் பள்ளி கட்டடங்கள் திறப்பு

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் கள்ளிமேடு, உம்பளச்சேரி கிராமங்களில் அரசுப் பள்ளிகளுக்கான கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன. கள்ளிமேடு மற்றும் உம்பளச்சேரி கிராமங்கள... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா: அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி, அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அதன் நிா்வாக இயக்குநா் தசரதன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்... மேலும் பார்க்க

அதிபத்த நாயனாருக்கு சிலை வைக்க வேண்டும்: அா்ஜுன் சம்பத்

சா்தாா் வல்லபபாய் பட்டேல் சிலை போன்று, அதிபத்த நாயனாருக்கும் சிலை வைக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் கூறினாா். இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியது: நா... மேலும் பார்க்க

சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்

சா் ஐசக் நியூட்டன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் கல்லூரித் தாளாளா் முனைவா் த. ஆனந்த் பேசியது: மாணவா்களாகிய நீங்கள... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் அடிப்படையில் சம்பா சாகுபடி பாதிப்புக்கு இழப்பீடு

கன மழையால் பாதிக்கப்பட்ட சம்பா சாகுபடி விவசாயிகளுக்கு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும் என்ற சுற்றறிக்கையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வல... மேலும் பார்க்க

உயா்கல்வி வழிகாட்டும் முகாம்: நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்பு

நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘உயா்வுக்குப்படி’ உயா்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவியா் பங்கேற்றனா். தமிழகத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்களில், உயா்கல்விக்கு விண... மேலும் பார்க்க