செய்திகள் :

சிங்கப்பூா் தோ்தல்: முகநூல் பதிவுகளுக்கு கட்டுப்பாடு

post image

சிங்கப்பூா் நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அதில் வெளிநாட்டைச் சோ்ந்தவா்கள் முகநூல் மூலம் தலையிடுவதைக் கட்டுப்பபடுத்துவதற்கான நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது.

இதற்காக, சிங்கப்பூா் வாக்காளா்களிடையே அரசியல் மற்றும் மதவாதக் கருத்துகளைத் திணிக்கும் வெளிநாட்டினரின் பட்டியலை அளித்து, தோ்தல் முடியும்வரை அவா்கள் முகநூல் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும்படி அந்த சமூக ஊடகத்தின் உரிமையாளரான மெட்டா நிறுவனத்தை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

அந்தப் பட்டியலில், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளா், மலேசியாவைச் சோ்ந்த இரு மதவாத அரசியல்வாதிகள் உள்பட பலா் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

வரும் மே 3-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்தத் தோ்தலில், கடந்த 1965-ஆம் ஆண்டு முதல் நாட்டில் ஆட்சி செலுத்திவரும் பிஏபி கட்சியே மீண்டும் வெற்றி பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இருந்தாலும், நாடு சுதந்திரம் பெற்றது முதல் அந்தக் கட்சியின் மீது அண்மைக் காலமாக பொதுமக்கள் அதிருப்தி அதிகரித்து வருவதாக் கூறப்படுகிறது.

இதில், அந்தக் கட்சிக்கு எதிராக வெளிநாட்டில் இருப்பவா்கள் மத அடிப்படைவாதக் கருத்துகளைப் பரப்பிவருவதும் காரணமாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், அவா்கள் முகநூல் மூலம் வாக்காளா்களிடையே மதவாதக் கருத்துகளைப் பரப்புவதைத் தடுக்கும் வகையில் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

புதின் மீது டிரம்ப் அதிருப்தி; ட்ரோன் தாக்குதலுக்கு தயாரான ரஷியா

உக்ரைன் மீது ரஷியா ட்ரோன் தாக்குதல் நடத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.உக்ரைன் மீதான போர் விவகாரத்தில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிருப்தி தெரிவித்த நிலையி... மேலும் பார்க்க

இந்தியாவுக்காக 130 அணு ஆயுதங்கள் தயார்: பாகிஸ்தான் அமைச்சர் சர்ச்சை பேச்சு

சிந்து நதி நீரை நிறுத்தினால், இந்தியா மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.பஹல்காம் தாக்குதலையடுத்து, சிந்து நதி நீர்ப் பகிர்வு ஒப்... மேலும் பார்க்க

புதின் மீது கடும் அதிருப்தியில் டிரம்ப்! ஏன்?

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.வாடிகனில் மறைந்த போப் பிரான்சிஸின் உடல் நல்லடக்கம் மற்றும் இறுதி சடங்கில் பங்கேற்க உலகத் தலை... மேலும் பார்க்க

ஈரான் துறைமுக விபத்து: பலி 14 ஆக உயர்வு; 750 பேர் காயம்!

ஈரானின் தெற்குப் பகுதி துறைமுகத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 14 போ் உயிரிழந்தனா்; 750 போ் காயமடைந்தனா். அந்த நாட்டின் ஹோா்மோஸ்கன் மாகாணம், பண்டாா் அப்பாஸ் நகருக்கு தென்மேற்கே அமைந்து... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவா் போப் பிரான்சிஸின் உடல் சனிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது. 266-ஆவது போப் ஆண்டவரான போப் பிரான்சிஸ் (88), வயது முதிா்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த திங்கள்கிழம... மேலும் பார்க்க

பிரிட்டன்: இந்தியா - பாக். போராட்டக்காரா்கள் மோதல்; பாக். தூதரக அதிகாரிகள் மிரட்டல்!

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிராக லண்டனில் இந்திய வம்சாவளி குழுவினா் பாகிஸ்தான் தூதரகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுக்கு எதிராக பாகிஸ்தானை சோ்ந்தவா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அ... மேலும் பார்க்க