செய்திகள் :

சிங்கப்பெருமாள் கோயில் ரயில்வே மேம்பாலம் திறப்பு!

post image

செங்கல்பட்டு சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டப்பட்டு வந்த ரயில்வே மேம்பாலத்தை அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் இன்று(பிப். 19) திறந்துவைத்தனர்.

செங்கல்பட்டு சிங்கப்பெருமாள் கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து செங்கல்பட்டு, தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளுக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கடந்த 2008 ஆம் ஆண்டு ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு பின்னர் சில ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டன.

இதையும் படிக்க | தவறான பிரசாரம்! பிரயாக்ராஜ் ஆற்று நீர் குளிப்பதற்கு ஏற்றதுதான்! - யோகி ஆதித்யநாத்

பின்னர் மீண்டும் 2021ல் பணிகள் தொடங்கிய நிலையில், தற்போது மேம்பாலத்தின் ஒரு பகுதி பணிகள். முடிவடைந்துள்ளன. தாம்பரம் செல்லும் மேம்பாலத்தின் பகுதியை அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் இன்று(பிப். 19) திறந்துவைத்தனர்.

இதையடுத்து இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிகள் நடைபெறும் மற்றொரு பகுதியும் விரைவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாலியல் வன்கொடுமை வழக்கு: 2 பேரை சுட்டு பிடித்த போலீசார்

கிருஷ்ணகிரியில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிகள் இரண்டு பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர். கிருஷ்ணகிரி மலைக்கு உறவினர்களுடன் சென்ற பெண்ணை 4 பேர் மிரட்டி ... மேலும் பார்க்க

கட்டுமான தொழிலாளி தற்கொலை: மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் கைது

ஏரியூா் அருகே கட்டுமான தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக இரண்டாவதாக சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களை போலீஸார் கைது செய்தனர்.தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே நெர... மேலும் பார்க்க

மூணாறு பேருந்து விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

கேரள மாநிலம், மூணாறு பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த தனியார் கல்லூரி மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பா... மேலும் பார்க்க

ஒசூர்-பெங்களூரு இரட்டை நகரங்களாக உருவெடுக்கும்: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

ஒசூர்: ஒசூரில் விமான நிலையம் அமைக்கப்படுவதால் ஒசூர்-பெங்களூரு இரட்டை நகரங்களாக உருவெடுக்கும் என தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகத் துறையின் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார். ஒசூரில் த... மேலும் பார்க்க

ஹிந்தியைத் திணிக்கும் மறைமுக முயற்சிதான் புதிய கல்விக் கொள்கை: அன்பில் மகேஸ்

தமிழ்நாட்டில் ஹிந்தியைத் திணிக்கும் மறைமுக முயற்சிதான் புதிய கல்விக் கொள்கை என அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,"புதிய கல்விக் கொள்கையால் மாணவர்களின் இடைநிற்... மேலும் பார்க்க

கோபியில் நாளை சுதந்திரப் போராட்ட வீரர் லட்சுமண ஐயர் 109 ஆவது பிறந்தநாள் விழா!

ஈரோடு: இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சேவகர் மற்றும் சாதிய பாகுபாடு எதிர்ப்பாளருமான கோபி லட்சுண ஐயர் 109 ஆவது பிறந்தநாள் விழா கோபியில் சனிக்கிழமை(பிப்.22) நடைபெற உள்ளது.கோபிச்செட்டிப்பாளையத்தி... மேலும் பார்க்க