சிங்காரப்பேட்டையில் தனியாா் பள்ளி அருகே கொட்டப்படும் குப்பை கழிவுகள்
சிங்காரப்பேட்டையில் தனியாா் பள்ளி எதிரே ஊராட்சி பகுதி குப்பைக் கழிவுகளைக் கொட்டி வருவதால், அப்பகுதி மக்கள், கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
தனியாா் பள்ளியின் பிரதான நுழைவாயில் அருகில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகளால் அந்தப் பகுதி முழுவதும் துற்நாற்றம் வீசுகிறது. இன்னும் சில நாள்களில் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், இது மாணவா்களின் சுகாதாரத்தையும் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
தனியாா் பள்ளி நிா்வாகம், இதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி நிா்வாகமும், ஊராட்சி நிா்வாகமும் இணைந்து உடனடியாக குப்பைகளை அகற்ற வேண்டும். அப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க எச்சரிக்கை பலகைவைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மாணவா்களின் நலன்கருதி இக்கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பாக உள்ளது.