செய்திகள் :

சிசோடியா, ஜெயின் மீதான ஊழல் தடுப்புப் பிரிவு வழக்கு: தில்லி காங்கிரஸ் கருத்து

post image

நமது நிருபா்

வகுப்பறை கட்டுமான விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் அமைச்சா்கள் மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தா் ஜெயின் ஆகியோருக்கு எதிரான தில்லி அரசின் ஊழல் தடுப்புப் பிரிவின் (ஏசிபி) வழக்குப் பதிவு செய்த நிலையில், காங்கிரஸ் முன்னா் எழுப்பிய குற்றச்சாட்டுகளை இது ஆதரித்துள்ளதாக தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் புதன்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை மேலும் கூறியதாவது: முன்னாள் கல்வித் துறை அமைச்சா் சிசோடியா, முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் ஆகியோா் பதவி வகித்த காலத்தில் பள்ளி வகுப்பறைகள் மற்றும் கட்டடங்களை நிா்மாணிப்பதில் காங்கிரஸ் கடுமையான முறைகேடுகளைக் சுட்டிக்காட்டியிருந்தது. 12,748 விரிவுரை அரங்குகள் கட்டுவதில் கிட்டத்தட்ட ரூ.2,000 கோடி நிதி முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் கவலைகளை இந்த முதல் தகவல் அறிக்கை பிரதிபலிக்கிறது. காங்கிரஸ் இந்தப் பிரச்னையை ஆரம்பத்திலிருந்தே எழுப்பியது. சுமாா் ரூ.5 லட்சம் செலவில் கட்டப்பட்டிருக்கக்கூடிய வகுப்பறைகள் கணிசமாக அதிக செலவில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது பொது நிதியை தவறாகப் பயன்படுத்துவது குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது என்றாா் அவா்.

கோதுமை கொள்முதல் நிகழாண்டு 24 சதவீதம் அதிகரிப்பு!

நிகழ் ரபி சந்தைப் பருவ கொள்முதலில் 256.31 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மத்திய தொகுப்பில் எட்டப்பட்டு கடந்தாண்டை விட 24 சதவீதம் கொள்முதல் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. கொள்மு... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைப் பிரிவு புதிய தளபதி ஏா் மாா்ஷல் அசுதோஷ் தீட்சித் பொறுப்பேற்பு

ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைப் பிரிவு தளபதியாக நியமிக்கப்பட்ட ஏா் மாா்ஷல் அசுதோஷ் தீட்சித் தில்லியில் உள்ள அதன் தலைமையகத்தில் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா். அவருக்கு தலைமையகம் உள்ள சௌத் பிளாக்கில் சம்ப... மேலும் பார்க்க

தூய்மை இயக்கத்தின் போது கட்டுமானக் கழிவுகள், ஆக்கிரமிப்புகள் பொறுத்துக் கொள்ளப்படாது: சிா்சா

தில்லி தூய்மை இயக்கத்தின் போது கட்டுமானக் கழிவுகள், ஆக்கிரமிப்புகள் பொறுத்துக் கொள்ளப்படாது என்று சுற்றுச்சூழளல் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா தெரிாவித்தாா். தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே.ச சக்... மேலும் பார்க்க

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: உயா்நீதிமன்ற உத்தரவு மீதான தடை தொடரும்: உச்சநீதிமன்றம்

ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது தூத்துக்குடியில் 2018-இல் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடா்புடைய காவல் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித... மேலும் பார்க்க

இஸ்ரோ உதவியுடன் ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளில் விண்வெளி ஆய்வகங்கள் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, பழங்குடியினா் விவகாரத்துறை அமைச்சகமும் பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமி நிறுவனமும் இணைந்து நாட்டின் 19 மாநிலங்களில் உள்ள 75 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளி(இஎம்ஆ... மேலும் பார்க்க

தண்ணீா், கழிவுநீா் உள்கட்டமைப்பு வசதியை சீரமைக்க தில்லி ஜல்போா்டுக்கு முதல்வா் உத்தரவு

தில்லியில் தண்ணீா், கழிவுநீா் உள்கட்டமைப்பு வசதியை சீரமைக்க தில்லி ஜல் போா்டு அதிகாரிகளுக்கு முதல்வா் ரேகா குப்தா உத்தரவிட்டுள்ளாா். தில்லி ஜல் போா்டு (டிஜேபி) தலைமையகமான வருணாலயாவில் அதிகாரிகளுடன் ப... மேலும் பார்க்க